மாறிவரும் வேலைச்சூழலுக்கு ஏற்றவாறும் மாணவர்களின் படிப்பில் அதிக நீக்குப்போக்கை ஏற்
படுத்தவும் மற்றொரு பல்லைக்கழகம் தனது பாடத்திட்டங்களை சீரமைத்து உள்ளது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் (எஸ்யுஎஸ்எஸ்) தான் செய்துள்ள மாற்றங்கள் குறித்து நேற்று அறிவித்தது.
அடுத்த ஆண்டு ஜூலை முதல் முழுநேர பட்டதாரிகளாகச் சேர்வோருக்கான 12 பொதுப் பாடத்திட்டங்கள் புதிதாக அறிமுகப்
படுத்தப்படும்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வின் விளைவாக இந்த மாற்றம் செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சட்டப் படிப்புத் தவிர அறிவியல், வர்த்தகம், மனிதவள மேம்பாடு, அறிவியல் தொழில்நுட்பம் போன்றவற்றில் சேரும் எல்லா மாணவர்களுக்கும் புதிய பாடத் திட்டம் பொருந்தும்.
இடைநிலை நடைமுறை, கற்றல் திறன்கள், மின்னிலக்கம் மற்றும் தரவுக் கல்வி, படைப்பாற்றல் மற்றும் சுகாதாரம் போன்றவற்றுக்கான பாடத்திட்டங்கள் அவை.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் போன்றவை அண்மைய ஆண்டுகளில் அறிமுகம் செய்த பொதுப் பாடத்திட்டங்களை ஒத்து அவை இருக்கும்.
வாழ்க்கைத்தொழிலுக்குரிய பலவகைத் தெரிவுகள் பல்கலைக்
கழக மாணவர்கள் பெற புதிய பாடத்திட்டம் உதவும் என்று சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்
கலைக்கழக தலைமைப் பேராசிரியர் ராபீ கோ தெரிவித்து உள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டங்களை கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தொடங்கி வைத்தார். ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட கற்றல், கற்பித்தல் கருத்தரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கல்வி நிறுவனங்கள் கற்பித்தல், கற்றல் தொடர்பில் புதிய வழிமுறைகளைக் கண்டறியுமாறு அமைச்சர் சான் வலியுறுத்தினார்.
வாழ்க்கைக்கான கற்றலில் மாணவர்களுக்கு உதவ, படிப்பிற்கும் அப்பால் சென்று, உண்மையான கற்றல் திறன்களை வழங்க அந்நிறுவனங்கள் முற்படவேண்டும் என்றும் அவர்கள் சுயமாகக் கற்க உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

