சாலை விபத்தில் சைக்கிளோட்டி மரணம்

ஆடம் ரோட்டில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 43 வயது சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துவாசை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலை அருகே உள்ள ஆடம் ரோட்டில் வாகனத்துக்கும் சைக்கிளுக்கும் இடையே ஏற்பட்ட விபத்து குறித்து காலை 6.29 மணிக்கு அழைப்பு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மயக்கநிலையில் இருந்த சைக்கிளோட்டி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆடவர்கள் இருவரை காவல்துறை விசாரித்துவருகிறது. அவர்களில் ஒருவர் வாகனத்தின் உரிமையாளர் என அறியப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட 560 கடுமையான விபத்துகள் ஏற்படுவதாக போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நாடாளுமன்றத்தில் இவ்வாண்டு தொடக்கத்தில் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!