சிங்கப்பூரில் அவ்வளவாக பயன்படுத்தப்படாத பலமாடி கார் பேட்டைகளை வேறு பயனீடுகளுக்குப் பயன்படுத்தும் யோச னையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பரிசீலிக்கும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தாக்கலான கேள்விக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில், தொழில்நுட்ப சாத்தியம், பாதுகாப்பு பரிசீலனைகள், குடியிருப்பாளர்களுக்கு ஏற்படக்கூடிய வசதிக் குறைவுகள் போன்ற அம்சங்கள் இதில் கவனத்தில் கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
சில புளோக்குகளில் சைக்கிள்களை நிறுத்திவைப்பதற்கான தேவை அதிகரித்தால் வீவகவிடம் அனுமதி பெற்று காலித்தளங்களில் சைக்கிள்களை நிறுத்திவைக்க அதிக இடங்களை நகர மன்றம் அமைக்கும் என்றாரவர்.

