சிங்கப்பூர் கரிமக் கழிவுக்கு அதிக வரியை விதிக்க முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறது. கரிம வாயுக் கழிவைக் குறைக்க அது இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
இருந்தாலும்கூட, சிங்கப்பூரின் பருவநிலை இலக்குகள் மிகமிகக் குறைவாக இருக்கிறது என்று உலக பருவநிலை ஆய்வு கூட்டமைப்பு ஒன்று தெரிவித்து இருக்கிறது.
சிங்கப்பூர், 2050வது ஆண்டு வாக்கில் அறவே கரிமக் கழிவு இல்லாத நிலையை எட்ட வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து, இதற்கான திட்டங்களை இந்த ஆண்டு அறிவித்தது.
2030வது ஆண்டுவாக்கில் கரிம வாயுக் கழிவை 60 மில்லியன் டன்னாகக் குறைக்க வேண்டும் என்பது சிங்கப்பூரின் இலக்காக இருக்கிறது.
சிங்கப்பூர் 2030வது ஆண்டு வாக்கில் கரிம கழிவுக்கான வரியை டன் ஒன்றுக்கு $50 முதல் $80 வரை உயர்த்துகிறது. இப்போது இந்த வரி $5ஆக இருக்கிறது.
இருந்தாலும்கூட சிங்கப்பூரின் பருவநிலை இலக்குகள் போதிய அளவுக்கு இல்லை என்று பருவநிலை செயல் கண்காணிப்பு என்ற கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு, சிங்கப்பூர் புதிய இலக்குகளை அறிவித்ததற்கு முன்னதாக சென்ற ஆண்டு செப்டம்பரில்கூட இதுபோலவேதான் தெரிவித்து இருந்தது.

