சிங்கப்பூர்-பிரிட்டன் உயர்கல்வி நிலையங்கள் உடன்பாடு

சிங்கப்பூர்-பிரிட்டன் உயர்கல்வி நிலையங்கள் உடன்பாடு

1 mins read
d32d0599-574e-4e1f-910d-dcfc7a4be8d1
என்டியு தலைவர் சுப்ரா சுரேஷ் (வலது), இம்பீரியல் கல்லூரித் தலைவர் ஹுக் பிராடி இருவரும் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். படம்: என்டியு சிங்கப்பூர் -

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழக (என்டியு) மாண­வர்­கள், மாணவர் பரி­வர்த்­தனை செயல்­திட்டங்­க­ளின் கீழ் அதிக வாய்ப்பு­க­ளைப் பெற்று பிரிட்­ட­னின் லண்­டன் இம்­பீ­ரி­யல் கல்­லூ­ரி­யில் கூட்டு ஆய்வுப் படிப்­புகளை விரைவில் மேற்­கொள்­ள­லாம்.

இந்த இரண்டு கல்வி நிலை­யங்­களும் நேற்று அறிக்கை ஒன்­றில் இதனை தெரி­வித்­தன. இந்த இரு அமைப்­பு­களும் சேர்ந்து ஆய்வு மையம் ஒன்றை உரு­வாக்­கும். 'என்டியு-இம்­பீ­ரி­யல் சுகா­தார, நீடித்த நிலைத்­தன்மை, தொழில்­நுட்ப மையம்' என்று அந்த ஆய்வு மையத்­திற்­குப் பெயர் சூட்­டப்­படும்.

இந்த இரண்டு உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்கு இடை­யில் ஒத்­து­ழைப்பை விரி­வு­ப­டுத்­து­வ­தற்­கான உடன்­பாட்­டின் ஓர் அங்­க­மாக இவை இடம்­பெ­று­கின்­றன.

அந்த உடன்­பாடு, நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நேற்று கையெ­ழுத்­தா­னது.

இந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் தலை­வ­ரான பேரா­சி­ரி­யர் சுப்ரா சுரே­சும் இம்­பீ­ரி­யல் கல்­லூரி தலை­வரான பேரா­சி­ரி­யர் ஹுக் பிரா­டி­யும் அதில் கையெ­ழுத்­திட்­ட­னர்.

பேரா­சி­ரி­யர் ஹுக், நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு முதன்­மு­த­லாக இப்­போது வரு­கை­ய­ளித்து இருக்­கி­றார்.

இந்த இரு­வ­ரும் சேர்ந்து செயல்­பட்டு என்­டி­யு­வில் லீ கோங் சியான் மருத்­து­வப் பள்­ளி­யைத் தோற்­று­வித்­த­னர். அந்­தப் பள்ளி 2017 ஆகஸ்ட் 28ஆம் தேதி அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டது.