மலேசியாவின் 1எம்டிபி நிதியிலிருந்து US$4.5 பில்லியன் (S$6.17) கையாளப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய தலைமறைவாக இருக்கும் மலேசிய தொழிலதிபர் ஜோ லோவின் சகோதரியான லோ மே லின்னுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவாட்டி லோ என்பவருக்கு தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ல் பத்திரிகையில் நேற்று முன்தினம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1எம்டிபியை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர்கள், திருவாட்டி லோவின் முகவரிக்கு வழக்கின் ஆவணத்தை அனுப்புவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததாக பெர்னாமா செய்தி தெரிவிக்கிறது.
திருவாட்டி லோ, 46, அவரது தொழிலதிபர் சகோதரர், 41, அவர்களின் தாய் கோ கெய்க் ஈவ், தந்தை லோ ஹொக் பெங், சகோதரர் லோ டேக் ஸ்சென் ஆகியோருடன் ஜோ லோவின் வணிகப் பங்காளி எனக் கருதப்படும் திரு டான் கிம் லூங்கும் அதில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
1எம்டிபி மற்றும் அதன் நான்கு துணை நிறுவனங்கள் வாதிகளாக உள்ளன. மலேசியாவைத் தளமாகக்கொண்ட சட்ட நிறுவனமான ஸ்க்ரைன் அவற்றைப் பிரதிநிதிக்கிறது. திருவாட்டி லோ, ஜோ லோ ஆகியோரிடமிருந்து 3.5 மில்லியன் அமெரிக்க டாலர் கோரப்படுகிறது.
இந்த வழக்கை எதிர்கொள்வதற்கான ஆவணத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய திருவாட்டி லோவுக்கு 14 நாட்கள் உள்ளன. அப்படி அவர் செய்யாவிடில் அவருக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும்.

