சிங்கப்பூர் வானிலை முன்னுரைப்பை மேம்படுத்த புதிய ஆராய்ச்சித் திட்டம்

சிங்கப்பூர் வானிலை முன்னுரைப்பை மேம்படுத்த புதிய ஆராய்ச்சித் திட்டம்

2 mins read
e836c1cb-70c4-4f77-8e23-93439e15889d
-

சிங்­கப்­பூர், வட்­டார நாடு­களில் வானிலை முன்­னு­ரைப்­பை­யும் பரு­வ­நி­லை­யைக் கணிக்­கும் ஆற்­ற­லை­யும் மேம்­ப­டுத்­தும் நோக்­கில் புதிய ஆராய்ச்­சித் திட்­டம் ஒன்று நேற்று தொடங்­கப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரி­லும் தென்­கி­ழக்­கா­சிய, இந்தோ-பசி­பிக் வட்­டா­ரங்­க­ளி­லும் வானிலை, பரு­வ­நிலை ஆராய்ச்சி முயற்­சி­களை ஊக்­கு­விக்­கும் பல ஆண்டு திட்­ட­மாக இது விளங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய சுற்­றுப்­புற அமைப்­புக்­கும் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் வானிலை ஆய்வுத் துறைக்கும் இடை­யி­லான உத்­தி­பூர்வ உற­வைக் குறிக்­கும் ஒப்­பந்­தத்­தின் ஒரு பகுதி இது.

அடுத்த இரண்டு மணி நேரத்­திற்­கான வானி­லையை முன்­னு­ரைப்­பது தொடர்­பான ஆராய்ச்சி மேற்­கொள்­ளப்­படும்.

உயர்­தர வானிலை 'ரேடார்' தர­வு­கள், பரு­வ­கால முன்­னு­ரைப்பு, வட்­டார நாடு­க­ளின் பரு­வ­நி­லைக் கணிப்­புத் தர­வு­க­ளின் ஆய்வு ஆகி­யவை இதற்­காக பயன்­ப­டுத்­தப்­படும் என்று இரு அமைப்­பு­களும் குறிப்­பிட்­டன. இத்­த­கைய ஆய்­வுத் திட்­டங்­க­ளால் சிங்­கப்­பூ­ரில் கன­மழை பொழி­வதை முன்­னு­ரைப்­ப­தில் மேம்­பாடு காண­லாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்தக் கூட்டு ஆராய்ச்­சித் திட்­டத்­தின் வழி­யாக சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு மைய­மும் ஆஸ்­தி­ரே­லிய ஆய்வுத் துறையும் மேம்­ப­டுத்­தப்­பட்ட முன்­னு­ரைப்பு, எச்­ச­ரிக்கை சேவை­களை வழங்க இய­லும். அத்­து­டன் பரு­வ­நிலை மாற்­றத்­திற்­குப் பொருந்­தும் திட்­டங்­க­ளுக்­கும் கைகொ­டுக்­கும்.

தேசிய சுற்­றுப்­புற வாரியம், அதன் சிங்­கப்­பூர் பரு­வ­நிலை ஆய்வு நிலை­யம் மேற்­கொண்­டுள்ள ஆய்­வைப் பற்றி கடந்த ஜூலை­யில் குறிப்­பிட்­டி­ருந்­தது.

நாட்­டின் மூன்­றா­வது தேசிய பரு­வ­நிலை மாற்ற ஆய்­வின் மூலம் 2100ஆம் ஆண்டு வரை­யி­லான பரு­வ­நிலை முன்­னு­ரைப்­பு­கள் வழங்­கப்­படும் என்று கூறப்­பட்­டது.

இந்த 'வி3' ஆய்­வின் வழி, பரு­வ­நிலை மாற்­றத்­தின் ஆபத்­தான விளை­வு­க­ளுக்கு எதி­ரான வழி­களை நாடு­கள் மிகத் துல்­லி­ய­மா­கத் திட்­ட­மிட இய­லும். ஆய்வு அடுத்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.