மறைந்த முன்னோடி எழுத்தாளர்களை சிறப்பித்த 'நினைவின் தடங்கள்'

2 mins read
1846c39b-3356-4222-b5f6-340bced7a460
-

மோன­லிசா

மறைந்த எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­களை நினை­வு­கூ­ர­வும் தமிழ் இலக்­கி­யத்­தில் அவர்­க­ளின் பங்­க­ளிப்­பைச் சிறப்­பிக்­க­வும் தேசிய நூலக வாரி­யம் அண்­மை­யில் நிகழ்ச்சி ஒன்­றுக்கு ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

அந்­தந்த ஆண்­டில் மறைந்த எழுத்­தா­ளர்­க­ளைக் கொண்­டா­டும் வகை­யில் ஒவ்­வோர் ஆண்­டும் 'நினை­வின் தடங்­கள்' எனும் நிகழ்வு, தேசிய நூலக வாரி­யத்­தின் ஏற்­பாட்­டில் நடை­பெற்று வரு­கிறது.

மறைந்த எழுத்­தா­ளர்­க­ளின் வாழ்க்­கைக்­கு­றிப்பு, தமிழ் மொழிக்­காக அவர்­கள் ஆற்­றிய நற்­பணி, வெளி­யீடு கண்ட படைப்­பு­கள் உள்­ளிட்­டவை இந்­நி­கழ்­வில் நினை­வு­கூ­ரப்­பட்­டது.

தொடர்ந்து ஐந்­தா­வது ஆண்­டாக இவ்­வாண்­டின் நிகழ்ச்சி கடந்த மாதம் 26ஆம் தேதி­யன்று மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை 'ஸூம்' வழி­யாக நடை­பெற்­றது. இவ்­வாண்டு மறைந்த எழுத்­தா­ளர்­கள் செ. கணே­ச­லிங்­கன், ஏ.பி. ராமன், தெணி­யான் (கந்­தையா நடே­சன்), கு.சின்­னப்ப பாரதி, பாவ­லர் இறை­ய­ர­சன், கே.எஸ். சிவ­குமா­ரன், தெளி­வத்தை ஜோசப், பா.செயப்­பி­ர­கா­சம் என்ற சூரி­ய­தீபன் ஆகிய எட்டு எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­கள் பற்­றிய சொற்­பொ­ழி­வு­கள் இடம்­பெற்­றன.

இவர்­களில் நாவல், சிறு­கதை, சமூ­க­வி­யல், அரசு அறி­வி­யல், பெண்­ணி­யம், கலை, திற­னாய்வு போன்ற பல்­வேறு துறை­களில் அதி­க­ளவு நூல்­களை எழுதி வெளி­யிட்­ட­வர்­தான் எழுத்­தா­ளர் செ.கணே­ச­லிங்­கன்.

பழம்­பெரும் செய்­தி­யா­ள­ரும் இலக்­கிய ஆர்­வல­ரு­மான ஏ.பி.ராமன் புனைந்த 700க்கும் மேற் பட்ட நாட­கங்­களில் பல, சிங்­கப்­பூர் மற்­றும் தமி­ழக வானொலி, தொலைக்­காட்சி நிலை­யங்­களில் இடம்­பெற்­றுள்­ளன.

இலக்­கிய ஊட­கத் துறை­களில் 'தெணி­யான்' என்­ற­ழைக்­கப்­பட்ட கந்­தையா நடே­சன், 100க்கும் மேற்­பட்ட சிறு­க­தை­கள், நாவல்­கள், விமர்­ச­னக்­கட்­டு­ரைத் தொகுப்­பு­கள் ஆகி­ய­வற்றை வெளி­யிட்­டுள்­ளார். தமிழ்­நாட்­டின் மூத்த புதின எழுத்­தா­ள­ரும் அர­சி­யல்­வா­தி­யு­மான கு. சின்­னப்ப பாரதி எழு­திய புதி­னங்­களும் சிறு­க­தை­களும் ஆங்­கி­லம், பிரெஞ்சு, சிங்­க­ளம் உள்­பட வெவ்­வேறு மொழி­களில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளன.

எழுத்­தா­ளர், அர­சி­யல்­வாதி, கல்­வி­யா­ளர் போன்ற பன்­மு­கத் திற­மைக் கொண்ட பாவ­லர் இறை­ய­ர­சன், பல்­வேறு தமிழ் இலக்­கிய நூல்­களை எழு­தி­யுள்­ளார். மும்­மொழி­யில் புலமை பெற்­ற­வ­ரும் பத்­தி­ரி­கை­யா­ள­ரு­மான எழுத்­தா­ளர் கே.எஸ். சிவ­கு­மா­ரன் பல புத்­த­கங்­க­ளைப் பன்­மொ­ழி­யில் எழுதி வெளி­யிட்­டுள்­ளார்.

மூத்த எழுத்­தா­ள­ரான சாகித்­திய ரத்னா தெளி­வத்தை ஜோசப், ஒரு சிறு­கதை ஆசி­ரி­யர், ஒரு நாவ­லா­சி­ரி­யர், ஓர் இலக்­கிய ஆய்­வா­ளர் எனப் பன்­மு­கத் திறமை கொண்­ட­வர் ஆவார்.

அறு­ப­து­களில் எழு­தத்­தொ­டங்கி எழு­ப­து­களில் இலக்­கிய உல­கில் தனித்­து­வம் மிகுந்த படைப்­பா­ளி­யாக மலர்ந்து தமக்­கென தனித்­து­வ­மான இடத்­தைப் பிடித்­துக்­கொண்­ட­வர் அவர்.

விரி­வு­ரை­யா­ளர் உள்­பட பல்­வேறு தமி­ழக அர­சாங்­கப் பொறுப்­பு­களை வகித்­துள்ள எழுத்­தா­ளர் சூரி­ய­தீபன், தம்­மு­டைய படைப்­பு­களில் சமூக அக்­க­றையை வெளிப்­ப­டுத்­து­வ­தில் கைத்­தேர்ந்­த­வர். அவர் பல்­வேறு சிறு­க­தைத் தொகுப்­பு­கள், கட்­டு­ரைத் தொகுப்­பு­கள், கவி­தை­கள் ஆகி­ய­வற்றை எழு­தி­யுள்­ளார்.

சிங்­கப்­பூ­ரைச் சார்ந்த தமிழ் ஆர்­வ­லர்­கள் பலர், ஒவ்­வொரு எழுத்­தா­ள­ரைப் பற்­றி­யும் சிறப்­புரை ஆற்­றி­னர். எழுத்­தா­ளர்­க­ளு­டைய சாத­னை­கள், வாழ்க்கை வர­லாறு, பெற்ற விரு­து­கள் உள்­ளிட்ட பல்­வேறு குறிப்­பு­கள் இவ்­வு­ரை­களில் இடம்­பெற்­றன. இந்­நி­கழ்­வினை திரு­வாட்டி இலக்­கியா செல்­வ­ராஜி வழி­ந­டத்­தி­னார்.