தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முன்னணி வங்கிகளை ஏமாற்றிய சிங்கப்பூரர்; $631 மில்லியன் இழப்பு

2 mins read
ffc55259-20a9-4f3f-bf33-e5f3fdaa4f3c
-

'அக்­ரி­டி­ரேட் இன்­டர்­நே­ஷ­னல்' எனும் சரக்கு வணிக நிறு­வ­னத்­தின் முன்­னாள் தலைமை நிதி அதி­காரி உல­க­ள­வில் 16 நிதி நிறு­வ­னங்­களை ஏமாற்­றி­ய­தில் 469 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$631 மி.) இழப்பு ஏற்­பட்­டது.

இந்­தியா, ஜப்­பான், தென்­கொரியா, தைவான் ஆகிய நாடு­களி­லுள்ள முன்­னணி வங்­கி­களும் அந்த நிதி நிறு­வ­னங்­களில் அடங்­கும். கடந்த 2016 ஜன­வரி முதல் 2019 நவம்­பர் மாதத்­திற்கு இடையே இந்த நிதி இழப்பு ஏற்­பட்­டது.

ஏமாற்று, பொய்க் கணக்கு உட்­பட தன்­மீ­தான 12 குற்­றச்­சாட்­டு­களை சிங்­கப்­பூ­ர­ரான லுலு லிம் பெங் கிம், 63, நேற்று ஒப்புக்­கொண்­டார். அது­போன்ற மேலும் 24 குற்­றச்­சாட்­டு­கள் கருத்­தில் கொள்­ளப்­பட்­டன.

லிம்­முக்கு 19½ ஆண்­டு­கள் சிறைத்­தண்­டனை விதிக்க வேண்­டு­மென அர­சாங்­கத் துணை வழக்­க­றி­ஞர் நிக்­க­லஸ் கூ கேட்­டுக்­கொண்­டார்.

"லிம்­மின் நட­வ­டிக்­கை­க­ளால் ஏற்­பட்ட இழப்பு எதிர்­பா­ரா­தது, திகைப்­பூட்­டு­வ­தாக உள்­ளது. அதன் விளை­வாக, சிங்­கப்­பூ­ரின் நற்­பெ­ய­ருக்­குக் களங்­கம் ஏற்­பட்­டி­ருக்­கிறது," என்று திரு கூ குறிப்­பிட்­டார்.

அக்­ரி­டி­ரேட் நிறு­வ­னத்­தின் தலைமை நிதி அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்­றி­ய­போது, தணிக்கை செய்­யப்­ப­டாத, பொய்­யான நிதி அறிக்­கை­களை நிதி நிறு­வ­னங்­க­ளி­டம் சமர்ப்­பிக்­கும்­படி கிம், தமது கீழ்­நிலைப் பணி­யா­ளர்­க­ளி­டம் அறி­வுறுத்­தி­னார்.

அக்­ரி­டி­ரெட் நிறு­வ­னத்­திற்­கான கடன் தொகையை மேலும் எந்த அள­விற்கு நீட்­டிக்­க­லாம் என்­பதை மதிப்­பிட அந்த ஆவ­ணங்­கள், அந்த நிதி நிறு­வ­னங்­க­ளுக்­குத் தேவைப்­பட்­டன.

அந்த ஆவ­ணங்­க­ளின் அடிப்­படை­யில், அந்த 16 நிதி நிறு­வ­னங்­களும் மொத்­தம் 886 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலரை அக்­ரி­டி­ரேட் நிறு­வ­னத்­திற்­குப் பொருள்­களை விநி­யோ­கித்த நிறு­வ­னங்­க­ளுக்­கும் அவற்­றின் துணை நிறு­வ­னங்­க­ளுக்­கும் வழங்­கின.

செம்­பனை எண்­ணெய், நிலக்­கரி வெட்­டி­யெ­டுத்­தல் ஆகிய தொழில்­களில் அக்­ரி­டி­ரேட் நிறு­வனம் ஈடு­பட்­டு­வந்த நிலை­யில், எண்­ணெய், நிலக்­கரி விலை­யேற்­றம் கார­ண­மாக 2020 ஜன­வ­ரி­யில் நிதிச் சிக்­கலை எதிர்­கொண்­டது.

அத்­து­டன், அந்­நி­று­வ­னத்­தைத் தோற்­று­வித்த இங் சே பெக் மீதும் அவ­ரின் மக­னும் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வா­கி­யு­மான இங் ஸின்வை மீதும் மோச­டிப் புகார்­கள் எழுப்­பப்­பட்­டன.

இந்­நி­லை­யில், கடந்த 2020 ஜன­வரி 15ஆம் தேதி வர்த்­த­கக் குற்ற விசா­ர­ணைப் பிரிவு, அக்­ரி­டி­ரேட் நிறு­வ­னத்­திற்கு எதி­ராக விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யது. அதற்கு மறு­நாளே லிம் பிரிட்­ட­னுக்­குச் சென்று­விட்­டார். ஓராண்­டு­கா­ல­மாக சிங்­கப்­பூர் காவல்­துறை லிம்­மைப் பல­முறை தொடர்­பு­கொள்ள முயன்­றும் அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

பின்­னர் அவர் ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­களில் இருப்­ப­தா­கத் தக­வல் கிட்­டி­யதை அடுத்து, 2021 ஜன­வ­ரி­யில் அவர் கைது­செய்­யப்­பட்­டார்.

லிம்­முக்­கான தண்­டனை குறித்து முடி­வு­செய்ய சிறிது கால அவ­கா­சம் தேவைப்­ப­டு­வ­தா­கக் கூறிய நீதி­பதி கோ கெங் சியோங், இந்த வழக்கை ஒத்­தி­வைத்­தார்.