அதிக குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

அதிக குடும்பங்களுக்கு உணவுப் பொருள் விநியோகம்

2 mins read
a2576405-13c2-446c-b035-4b5b4675de00
-

சிங்­கப்­பூ­ரின் வட­மேற்கு வட்­டா­ரத்­தில் உள்ள வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு உண­வுப் பொருள் பரி­வுப் பொட்­ட­லங்­களை விநி­யோ­கிக்­கும் திட்­டம் விரி­வாக்­கப்­பட்­டுள்­ளது. அதி­க­மான குடும்­பங்­க­ளுக்கு பொட்­ட­லங்­கள் கூடு­த­லான முறை வழங்­கப்­படும்.

'வீகேர்@நார்த் வெஸ்ட் சர்­விஸ் வீக்ஸ்+' எனும் அந்த விரி­வாக்­கப்­பட்ட திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது. அதில் 50 வெள்ளி மதிப்­பி­லான பரி­வுப் பொட்­ட­லங்­களை 7,300க்கும் அதி­க­மான குடும்­பங்­கள் பெறும்.

தற்­போது ஓராண்­டுக்கு ஒரு முறை வழங்­கப்­படும் அந்­தப் பொட்­ட­லங்­கள் இனி மூன்று மாதங்­க­ளுக்கு ஒருமுறை விநி­யோ­கிக்­கப்­படும்.

வட­மேற்கு சமூக மேம்­பாட்டு மன்­றம் கடந்த 2014ஆம் ஆண்­டில் அந்த விநி­யோ­கத் திட்­டத்­தைத் தொடங்­கி­யது. முன்­ன­தாக அர­சாங்க வாடகை வீடு­களில் வசிப்­ப­வர்­கள் மட்­டும் பரி­வுப் பொட்­ட­லங்­க­ளைப் பெற்று வந்­த­னர்.

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட திட்­டத்­தின்­கீழ், அந்த வட்­டா­ரத்­தில் உள்ள சமூக உத­வித் திட்­டங்­களில் உதவி பெறும் குடி­யி­ருப்­பா­ளர்­களும் அர­சாங்க வாடகை வீடு­களில் வசிக்­கா­த­வர்­களும் உண­வுப் பொருள் பரி­வுப் பொட்­ட­லங்­க­ளைப் பெறு­வர்.

உயர்ந்­துள்ள வாழ்க்­கைச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க உத­வும் நோக்­கில் விநி­யோ­கத் திட்­டம் விரி­வு­ ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

திட்­டத்­தின் தொடக்­க­விழா சுவா சூ காங்­கில் உள்ள லிம்­பாங் பூங்காவில் நேற்று நடை­பெற்­றது.

அதில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்ட துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், குறைந்த வரு­வாய் குடும்­பங்­க­ளுக்­கும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய நிலை­யில் இருப்­ப­வர்­க­ளுக்­கும் அர­சாங்­கம் தற்­போது வழங்­கும் உத­வித் திட்­டங்­க­ளு­டன் புதிய திட்டமு நிறைவு தரும் என்று கூறி­னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

"வீட்­டுச் செல­வு­க­ளைச் சமா­ளிக்க, இன்­னும் பல வசதி குறைந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ஆண்டு முழு­வ­தும் உணவு உதவி கிடைக்­கும் என்­பது மகிழ்ச்சி தரு­கிறது. வாழ்க்­கைச் செல­வு­கள் அதி­க­ரிப்­பின் தாக்­கத்­தைக் குறைக்க இது உத­வும்," என்றார் திரு வோங்.

மேலும், பரி­வுப் பொட்­டங்­களில் உள்ள 34 பொருள்­களில் 12ஐ குடி­யி­ருப்­பா­ளர்­கள் தாங்­களே தேர்வு செய்­து­கொள்­ள­லாம். நேற்று தொடங்கி, 2023ஆம் ஆண்டு ஜன­வரி 23ஆம் தேதி வரை, இணை­யத்­தில் உள்ள படி­வத்தை நிரப்ப வேண்­டும். இந்த ஆறு வாரங்­களில் வடமேற்கு வட்­டா­ரத்­தில் உள்ள பல்­வேறு இடங்­களில் திடீர் சந்­தை­கள் நடத்­தப்­பட்டு அவற்­றில் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தங்­க­ளுக்­குத் தேவை­யான பொருள்­க­ளைத் தேர்வு செய்து கொள்­ள­லாம்.

முன்­ன­தாக பரி­வுப் பொட்­ட­லங்­களில் 21 பொருள்­கள் மட்­டுமே இருந்­தன. குடி­யி­ருப்­பா­ளர்­க­ளால் அப்­பொ­ருள்­க­ளைத் தேர்வு செய்ய முடி­யாது.