புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள செஞ்சா உணவங்காடி நிலையம் நேற்று திறக்கப்பட்டபோது 4,000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். மிஷெலின் தகுதி பெற்ற பிரபல உணவகம் உட்பட மொத்தம் 28 உணவுக் கடைகள் இங்கு இடம்பெற்றுள்ளன.
ஒரு சமூக நிறுவனமாக செயல்படும் இந்த உணவங்காடி நிலையத்தில் கட்டுப்படியாகும் விலையில் பலதரப்பட்ட உணவு வகைகள் விற்கப்படுகின்றன. பிரதான உணவின் விலை 2.80 அல்லது 3.50 வெள்ளியில் தொடங்கு கிறது. ஃபேர்பிரைஸ் குழுமம் நடத்தும் செஞ்சா உணவங்காடி நிலையத்தில் முதல் முறையாக 'வாரோங் ரைஸ் கார்டன்' உணவும் விற்கப்படுகிறது.
முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கான 'ரைஸ் கார்டன்' சமூகத் திட்டத்தின் கீழ் இந்த ஹலால் உணவு தயாரிக்கப்படுகிறது. 'நாசி சம்போர்' என மலாயில் குறிப்பிடப்படும் உணவு மிகவும் குறைவாக இரண்டு வெள்ளியில் தொடங்குகிறது.
நேற்று மாலை 3.00 மணி வரை கூட்டம் இருந்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது. பெரும்பாலான கடைகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. சில கடைகளில் வாடிக்கையாளர்கள் முப்பது நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தனர்.
ஹாலந்து புக்கிட் தீமா குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் களான எட்வர்ட் சியா, டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினரான லியாங் எங் ஹுவா ஆகிய மூவரும் புதிய உணவங்காடி நிலையத்தை சுற்றிப் பார்த்து கடைக்காரர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் உரையாடினர்.
அறுபது ஆண்டுகளாக செயல்படும் 'தியோச்சு' பாணி வாத்து உணவுக்குப் பிரபல மான 'ஹெங் ஜி கூஸ் அண்ட் டக் ரைஸ்' கடையும் இங்கு உள்ளது.

