அந்திமகால பராமரிப்பு நிலையத்திற்கு $6.35 மி. நன்கொடை

அந்திமகால பராமரிப்பு நிலையத்திற்கு $6.35 மி. நன்கொடை

2 mins read
f5fbffc2-a764-42dd-acd9-e7dc203e60f3
-

சிங்­கப்­பூ­ரில் வாழ்­வின் இறு­திக்­கட்­டத்தை எதிர்­நோக்­கி­யி­ருக்­கும் நோயா­ளி­க­ளுக்­கான சேவை­களுக்கு ஆத­ரவு வழங்­கும் வண்­ணம் கோ அற­நி­று­வ­னம் $6.35 மில்­லி­யன் வழங்க உறு­தி­ய­ளித்­து இருக்கிறது.

சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் அந்திமகாலப் பரா­ம­ரிப்பு நிலை­யத்­திற்கு இந்­தத் தொகை வழங்­கப்­படும்.

சிங்­கப்­பூ­ரில் ஒவ்­வோர் ஆண்­டும் உயி­ரி­ழக்­கும் பத்­துப் பேரில் நால்­வர் மட்­டுமே வாழ்­வின் இறு­திக்­கட்­டத்­தில் வலி­யைப் போக்கி வாழ்க்­கைத் தரத்தை மேம்­ப­டுத்த உத­வும் நிபு­ணத்­துவ அந்திமகாலப் பரா­ம­ரிப்­புச் சேவை­க­ளைப் பெறு­வ­தாக இந்­நி­லை­யம் கூறி­யது.

கோ அற­நி­று­வ­னத்­தின் நன்­கொடை புற்­று­நோ­யா­ளி­க­ளுக்­கான புதிய சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புப் பயிற்­சித் திட்­டத்­தின் செயல்­தி­றனை ஆராய உத­வும்.

புற்­று­நோ­யு­டன் வாழ நேரி­டு­வோர் எதிர்­கொள்­ளும் சவால்­க­ளைச் சமா­ளிக்க மேம்­பட்ட ஆத­ரவு வழங்­க­வும் அது நோயா­ளி­க­ளுக்கு எளி­தில் கிடைக்­க­வும் இத்­திட்­டம் உத­வும் என்று கூறப்­பட்­டது.

கடந்த 2020 ஏப்­ரல் முதல் 2021 மார்ச் வரை மருத்­து­வ­ம­னை­யில் உயி­ரி­ழந்த 9,000 நோயா­ளி­கள் உயி­ரி­ழப்­ப­தற்கு ஏறக்­கு­றைய 11 நாள் முன்­னர்­தான் அந்திமகாலப் பரா­ம­ரிப்­புச் சேவை­யைப் பெற்­றுள்­ள­னர்.

ஒப்­பு­நோக்க வீட்­டி­லேயே இச்­சே­வை­யைப் பெற்­றுக்­கொண்­ட­வர்­கள் உயி­ரி­ழப்­ப­தற்கு 38 நாள்­க­ளுக்கு முன்­பி­ருந்து இத­னால் பல­ன­டைந்­த­னர்.

புதிய பயிற்­சித் திட்­டத்­தின்­மூலம் சிங்­கப்­பூர் தேசிய புற்­று­நோய் சிகிச்சை நிலை­யத்­தின் நோயா­ளி­களும் அவர்­க­ளின் பரா­ம­ரிப்­பா­ளர்­களும் முத­லில் பல­ன­டை­வர்.

நோயா­ளி­கள் தங்­க­ளது சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­களை மேம்­பட்ட முறை­யில் திட்­ட­மிட இது உத­வும்.

தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய்களால் ஏற்­படும் உடல், மனம், உணர்வு ஆகியவை தொடர்பான சிர­மங்­க­ளைச் சமா­ளிக்க இது கைகொ­டுக்­கும் என்று சிங்­ஹெல்த் டியூக்-என்­யு­எஸ் அந்திமகாலப் பரா­ம­ரிப்பு நிலை­யம் கூறியது.