ஓசிபிசி வங்கி மோசடியுடன் தொடர்புடைய ஆடவருக்குச் சிறை, அபராதம், தடை

ஓசிபிசி வங்கி மோசடியுடன் தொடர்புடைய ஆடவருக்குச் சிறை, அபராதம், தடை

2 mins read
b1207f66-fadc-4f34-bd83-23a4f46413ad
-

ஓசி­பிசி வங்கி மோச­டி­யு­டன் தொடர்­பு­டைய ஆட­வ­ருக்கு மூன்று மாதங்­கள், 22 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது. அத்­து­டன் அவ­ருக்கு $500 அப­ரா­தமும் விதிக்­கப்­பட்­டது.

மேலும் அனைத்து வகை வாக­னங்­களை ஓட்­ட­வும் அவற்­றுக்­கான உரி­மங்­க­ளைப் பெற­வும் 32 வயது மார்க் டியோ சின் யானுக்கு ஓராண்­டுத் தடை விதிக்­கப்­பட்­டது.

2021ஆம் ஆண்­டில் தமது நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான வங்­கிக் கணக்கை இன்­னொ­ரு­வர் பயன்­ப­டுத்த டியோ ஏற்­பாடு செய்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

அந்த வங்­கிக் கணக்­கைப் பயன்­ப­டுத்தி இணைய மோசடி மூலம் பறிக்­கப்­பட்ட பணம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாறு மொத்­தம் $53,801 பெறப்­பட்­டது.

இதில் ஓசி­பிசி வங்கி

மோச­டி­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­ட­மி­ருந்து ஏமாற்­றிப் பறிக்­கப்­பட்ட $18,801 தொகை­யும் அடங்­கும்.

எஞ்­சிய தொகைக்­கும் ஓசி­பிசி வங்கி மோச­டி­யு­டன் தொடர்பு உள்­ளதா என்­பது குறித்து நீதி­மன்ற ஆவ­ணங்­கள் குறிப்­பி­ட­வில்லை.

தம்மீது சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை டியோ ஒப்புக்கொண்டார்.

அவற்­றில் மிரட்­டல் விடுத்­தல், போக்­கு­வ­ரத்­துக் குற்­றங்­கள் போன்­றவை அடங்­கும்.

கடந்த ஆண்டு டிசம்­பர் 8ஆம் தேதிக்­கும் கடந்த ஜன­வரி மாதம் 19ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் ஓசி­பிசி வங்­கிக் கணக்கு வைத்­தி­ருந்த சிலர் காவல்­து­றை­யி­டம் புகார் செய்­த­னர்.

ஓசி­பிசி மோசடி தொடர்­பாக மொத்­தம் 768 புகார்­கள் பதி­வா­கின.

அடை­யா­ளம் தெரி­யா­த­வர்­கள் விரித்த மோசடி வலை­யில் சிக்­கி­ய­தாக ஓசி­பிசி வங்கிக் கணக்கு வைத்­தி­ருந்த சிலர் புகார் செய்­த­னர்.

தங்­கள் வங்­கிக் கணக்­கு­க­ளி­லி­ருந்து தங்­கள் அனு­மதி இல்­லா­மல் பணம் எடுக்­கப்­பட்­ட­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு மொத்­தம் $12.8 மில்­லி­யன் இழப்பு ஏற்­பட்­டது.

தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளின் நலன் கருதி பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு அவர்­கள் இழந்த பணத்­தைக் கொடுப்­ப­தாக ஓசி­பிசி கடந்த ஜன­வரி மாதம் தெரி­வித்­தது.

இது ஒரு­பு­றம் இருக்க, டாக்சி கட்­ட­ணம் செலுத்­தா­மல் கத்­தி­யைக் காட்டி டாக்சி ஓட்­டு­நரை மிரட்­டி­ய­தா­க­வும் டியோ மீது குற்­ற­ம் சுமத்­தப்­பட்­டது.

டியோ­வி­ட­மி­ருந்து தப்ப முயன்­ற­போது அந்த டாக்சி ஓட்­டு­ந­ரின் இடது தோள்­பட்­டை­யில் வெட்­டுக் காயம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, காவல்­து­றை­யி­டம் டியோ சர­ண­டைந்­தார்.

பாதிக்­கப்­பட்ட டாக்சி ஓட்­டு­நர் மருந்­த­கத்­தில் சிகிச்சை பெற்­றுக்­கொண்­டார். அவ­ருக்கு ஏற்­பட்ட காயத்­துக்­குத் தையல் போடப்­பட்­டது. அவ­ருக்கு நான்கு நாள் மருத்­துவ விடுப்பு வழங்­கப்­பட்­டது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 17ஆம் தேதி­யன்று 62 வயது ஆட­வரை ஏமாற்றி அவ­ரி­ட­மி­ருந்து டியோ $500 பறித்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

உரி­மம் இல்­லா­மல் இயோ சூ காங் சாலை­யில் டியோ கார் ஓட்­டிக்­கொண்­டி­ருந்­த­போது பிடி­பட்­டார்.