பழைய மரச்சாமான்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பெரிய மரச்சிற்பங்கள்

பழைய மரச்சாமான்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பெரிய மரச்சிற்பங்கள்

1 mins read
8a5e134d-1720-4133-a24d-903fa1180771
-

பழைய மரச்­சா­மான்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட நான்கு பெரிய மரச்சிற்­பங்­கள் செந்­தோசா தீவில் உள்ள பலவான் கடற்­

க­ரை­யில் மறைவான இடங்களில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்­றில் சில சிற்­பங்­க­ளைக் காண வனப் பகு­திக்­குள் சிறிது தூரம் செல்ல வேண்­டும்.

மரச்சிற்­பங்­க­ளைக் காண கட்­ட­ணம் செலுத்த தேவை­யில்லை. அவை 2024ஆம் ஆண்டு வரை செந்­தோ­சா­வில் இருக்­கும்.

டென்­மார்க் தலை­ந­கர் கோப்­பன்­ஹே­கனை மைய­மா­கக் கொண்ட நீடித்த நிலைத்­தன்மை கலை­ஞ­ரும் மறு­சு­ழற்சி ஆர்­

வ­ல­ரு­மான தாமஸ் டம்­போ­வால் இந்த நான்கு மரச்சிற்­பங்­களும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

இந்தப் பெரிய மரச்சிற்பங்கள் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க இணையம் வழி இருவழித் தொடர்பு வரைபடம் உள்ளதாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது. பலவான் கடற்கரையில் அவ்வளவு பிரபலம் இல்லாத இடங்களை மக்கள் முன் கொண்டு போய் நிறுத்த இது உதவும் என அது கூறியது.