தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாடியிலிருந்து போத்தல்களை வீசியவருக்குச் சிறை

2 mins read
40621a88-ec6c-41a1-89c9-dba93af71ba6
-

ஏழா­வது மாடி வீட்­டி­லி­ருந்து 13 பீர் போத்­தல்­களை வீசிய ஆட­வ­ருக்கு 15 வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

த­மக்­குக் கைகள் தொடர்­பான மருத்­து­வப் பிரச்­சினை இருப்­ப­தால் வீட­மைப்பு வள­ரச்­சிக் கழ­கத்­தின் இல்ல மேம்­பாட்­டுத் திட்­டத்­தின்­கீழ் தமது வீடு புதுப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து, வீட்­டில் உள்ள குப்­பைத் தொட்­டிக்­குள் போத்­தல்­களை வீசு­வ­தில் தமக்­குச் சிர­மம் ஏற்­பட்­ட­தாக 58 வயது லிம் லாய் சூன் தெரி­வித்­தார்.

ஜூரோங் வெஸ்ட் வட்­டா­ரத்­தில் உள்ள தமது ஏழா­வது மாடி வீட்­டி­லி­ருந்து பீர் போத்­தல்­களை வீசி பிற­ருக்கு ஆபத்து விளை­வித்த குற்­றச்­சாட்டை அவர் ஒப்­புக்­கொண்­டார்.

துப்­பு­ர­வுப் பணி­யா­ள­ரான லிம் கடந்த பிப்­ர­வரி மாதத்­துக்­கும் ஏப்­ரல் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் தனித்­த­னிச் சம்­ப­வங்­க­ளாக மொத்­தம் 13 முறை, தமது ஏழா­வது மாடி வீட்­டி­லி­ருந்து பீர் போத்­தல்­களை வீசி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த 17ஆம் தேதி­யன்று இது­கு­றித்து காவல்­து­றை­யி­டம் ஒரு­வர் புகார் செய்­தார்.

அந்த நபர் வேலை­யி­டத்­துக்­குச் செல்ல காலை நேரத்­தில் கூரை உள்ள நடை­பா­தை­யில் போக்­கு­வ­ரத்­துக்­கா­கக் காத்­துக்­கொண்­டி­ருந்­த­போது மாடி­யி­

லி­ருந்து வீசப்­பட்ட பீர் போத்­தல் தரை­யில் விழுந்து சித­றி­யது.

தனித்­த­னிச் சம்­ப­வங்­க­ளாக ஏழு முறை, ஏழா­வது மாடி வீட்­டி­லி­ருந்து பீர் போத்­தல்­கள் வீசப்­பட்­ட­தாக அதே கட்­ட­டத்­தின் ஆறா­வது மாடி­யில் வசிக்­கும் இன்­னொ­ரு­வ­ரும் புகார் செய்­தி­ருந்­தார்.

இது­தொ­டர்­பாக காவல்­துறை, தேசிய சுற்­றுப்­புற வாரி­யம் ஆகி­யவை விசா­ரணை நடத்­தின. கண்­கா­ணிப்பு கேம­ராக்­க­ளின் உத­வி­யோடு லிம் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தாக அர­சாங்க வழக்­க­றி­ஞர் தெரி­வித்­தார்,

லிம்­முக்கு நான்கு மாதங்­கள் முதல் ஆறு மாதங்­கள் வரை சிறைத் தண்­டனை விதிக்க வேண்­டும் என்று நீதி­மன்­றத்­தி­டம் அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் கோரிக்கை விடுத்­தி­ருந்­த­னர்.