அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,500 புதிய வேலைகள்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2,500 புதிய வேலைகள்

2 mins read
da46c0b5-a8d4-4f27-8b73-5ad501113c17
-

உணவு உற்பத்தித் துறை வளர்ச்சியை விரைவுபடுத்த உதவும் வேலை மறுவடிவமைப்பு

உணவு உற்­பத்­தித் துறை­யில் அடுத்த ஐந்­தாண்­டு­களில் புதி­தாக ஏறக்­கு­றைய 2,500 வேலை­கள் உரு­வா­கும். மறு­வ­டி­வ­மைக்­கப்­பட்ட வேலை­களும் இவற்­றில் அடங்­கும்.

உணவு உயி­ரி­யல்­தொ­ழில்­நுட்­பர், நீடித்த நிலைத்­தன்­மைப் பொறி­யா­ளர், தானி­யக்­கப் பொறி­யா­ளர் உள்­ளிட்ட புதிய எட்டுப் பிரி­வு­களில் வேலை­கள் உரு­வாக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன.

மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் வெளி­யிட்ட புதுப்­பிக்­கப்­பட்ட தொழில்­துறை உரு­மாற்­றத் திட்­டம் 2025ல் இந்­தத் தக­வல்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

பிடோக் ஃபுட் சிட்­டி­யில் அமைந்­துள்ள சின் முய் ஹெங் ஃபுட் இண்­டஸ்ட்­ரீஸ் நிறு­வ­னத்­தின் புதிய தொழிற்­சா­லை­யை நேற்றுத் திறந்து­வைத்து அவர் உரை­யாற்­றி­னார்.

உணவு உற்­பத்­தித் துறைக்­கான வேலை உரு­மாற்­றத் திட்­டத்­தின்­கீழ் முத­லா­ளி­கள் ஊழி­யர்­க­ளுக்­குத் தேவைப்­படும் திறன்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வாய்ப்­ப­ளிப்­ப­தும் உரு­மாற்ற முயற்­சி­க­ளுக்கு ஏற்ற புதிய வேலை வாய்ப்­பு­களை அவர்­களுக்கு வழங்­கு­வதும் சாத்­தி­ய­ம் ஆகும்.

வேலை உரு­மாற்­றத் திட்­டத்தை எண்­டர்­பி­ரைஸ் சிங்­கப்­பூர் நிறு­வ­னம், மனி­த­வள அமைச்சு, சிங்­கப்­பூர் ஊழி­ய­ரணி ஆகி­யவை இணைந்து உரு­வாக்­கி­யுள்­ளன. அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான முக்­கிய வேலை­களை அடை­யா­ளம்­ கண்டு அதற்­கேற்ப நிறு­வ­னங்­கள் அவற்­றின் திற­னா­ளர் எண்­ணிக்­கையை மேம்­ப­டுத்­து­வ­தற்­குக் கடைப்­பி­டிக்­க­வேண்­டிய உத்­தி­களை அத்­திட்­டம் பரிந்­துரைக்­கிறது. வர்த்­தக உரு­மாற்­றத்­தை­யும் அது ஆத­ரிக்­கிறது.

புதிய வர்த்­தக மாதிரி, வேலை­கள் ஆகி­ய­வற்­றுக்கு ஊழி­யர்­க­ளின் ஆத­ரவு கிட்­டா­விட்­டால் நிறு­வ­னங்­களை மறு­சீ­ர­மைக்க இய­லாது என்று டாக்­டர் டான் தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

"வர்த்­தக உரு­மாற்­றத்­திற்­குத் திற­னுள்ள ஊழி­யர்­கள் முக்­கி­யம். அதே­நே­ரத்­தில் நிறு­வ­னங்­க­ளின் உரு­மாற்­றம், திறனை மேம்­ப­டுத்­திக்­கொண்டு புதிய வேலை வாய்ப்பு­க­ளைக் கைப்­பற்­று­வ­தில் ஊழி­யர்­கள் கூடு­தல் ஆர்­வம்­காட்­டு­வ­தற்கு ஊக்­க­ம­ளிக்­கிறது," என்­றார் அவர்.

வேலை உரு­மாற்­றத் திட்­டம் மாற்­றம் தேவைப்­படும் 22 வேலை­களை ஆய்­வு­செய்­துள்­ளது. அடுத்த ஐந்து ஆண்­டு­களில் இவற்­றில் 25 விழுக்­காட்டு வேலை­கள் மறு­வ­டி­வ­மைக்­கப்­படும். அல்­லது மேம்­பட்ட பொறுப்­பு­க­ளைக் கொண்­டி­ருக்­கும் என்று கூறப்­பட்­டது.

மற்ற வேலை­களில் அதிக மாற்­றம் தேவைப்­ப­டா­விட்­டா­லும் மின்­னி­லக்­க­ம­ய­மா­தல், தானி­யக்­க­ம­ய­மா­தல் ஆகி­யவை தேவைப்­ப­டு­கின்­றன. கூடு­த­லான நிறு­வ­னங்­கள் வேலை­களை மறு­வ­டி­வ­மைத்து, அவற்­றுக்­கேற்ப ஊழி­யர்­க­ளுக்கு மறு­ப­யிற்சி, திறன்­மேம்­பாட்­டுப் பயிற்சி ஆகி­ய­வற்றை வழங்­கு­வ­தற்கு அர­சாங்க அமைப்­பு­களும் தேசி­ய தொழிற்­சங்­கக் காங்­கி­ர­சும் தொடர்ந்து உத­வு­ம் எனக் கூறப்­பட்­டது.