டிசம்பர் 19ல் உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முடிவுகள்

டிசம்பர் 19ல் உயர்நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கை முடிவுகள்

1 mins read
3ec86dce-2896-4649-8e0a-7169f4751e80
-

அடுத்த ஆண்டு உயர்­நி­லைப் பள்ளி முதல் வகுப்­புக்­கான மாண­வர் சேர்க்கை முடி­வு­கள் இம்­மா­தம் 21ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளி­யி­டப்­படும் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இவ்­வாண்டு தொடக்­கப்­பள்ளி இறு­தி­யாண்­டுத் தேர்வு எழு­திய மாண­வர்­கள், உயர்­நி­லைப் பள்­ளிச் சேர்க்­கைக்­கான விண்­ணப்­பத்­து­டன் சிங்­கப்­பூர் தொலை­பேசி எண்ணை இணைத்தி­ருந்­தால், குறுஞ்­செய்தி வாயி­லாக அவர்­க­ளுக்கு முடி­வு­கள் அறி­விக்­கப்­படும்.

இணை­யத்­தின் வாயி­லா­க­வும் முடி­வு­க­ளைத் தெரிந்­து­கொள்­ள­லாம். மாண­வர்­கள் படித்த தொடக்­கப்­பள்­ளி­க­ளி­லும் இந்த முடி­வு­களைத் தெரிந்­து­கொள்ள இய­லும்.

முடி­வு­க­ளைப் பெற்­றுக்­கொண்ட மாண­வர்­கள் புதிய பள்­ளிக்கு நேரில் செல்­ல­வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று அமைச்சு கூறி­யது. கூடு­தல் விவ­ரங்­க­ளுக்கு இம்­மா­தம் 21ஆம் தேதி பிற்­ப­க­லில் இருந்து, அவ­ர­வர் உயர்­நி­லைப் பள்­ளி­யின் இணை­யத்­த­ளங்­களை நாட­லாம்.

கல்­வி­யாண்­டின் முதல் நாளான அடுத்த ஆண்டு ஜன­வரி 3ஆம் தேதி தகுந்த கார­ணங்­க­ளுக்­காக உயர்­நி­லைப் பள்­ளிக்­குச் செல்ல இய­லாத மாண­வர்­கள், அது­கு­றித்து சம்­பந்­தப்­பட்ட பள்­ளிக்­குத் தக­வல் தெரி­விப்­ப­தன் மூலம் தங்­க­ளது சேர்க்­கையை உறுதி செய்­து­கொள்­ள­லாம்.