மகளைக் காயப்படுத்திய தாய்க்கு சிறை

மகளைக் காயப்படுத்திய தாய்க்கு சிறை

2 mins read
062aeb52-c686-43af-8444-dadc04a0d4e2
-

மக­ளைக் காயப்­ப­டுத்­திய குற்­றத்­திற்­காக 41 வயது சாஹா­டியா ஜமா­ரிக்கு நேற்று 4 மாதங்­கள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

கடந்த 2016ல் தமது பரா­ம­ரிப்­பில் இருந்த இரு குழந்­தை­க­ளுக்கு விஷம் கொடுத்த குற்­றத்­திற்­காக ஏற்­கெ­னவே ஏழு ஆண்­டு­கள் சிறைத்­தண்­ட­னையை இவர் அனு­ப­வித்து வரு­கி­றார். முன்­னர் அவர் குழந்­தைப் பரா­ம­ரிப்­பா­ள­ரா­க­வும் தாதி­யா­க­வும் இருந்­த­போது தமது பரா­ம­ரிப்­பில் இருந்த குழந்­தை­களுக்கு தூக்க மருந்து உள்­பட பல மருந்­து­களை அவர் கொடுத்­துள்­ளார்.

கடந்த 2021 ஜூன் மாதம், தமது ஆண் நண்­ப­ரு­டன் சண்டை பிடித்­தார் சாஹா­டியா. நண்­ப­ரைத் திட்­டிய பின்­னர் 19, 20 வய­து­களில் இருந்த மகள்­க­ளை­யும் திட்­டி­னார்.பொருள்­களை எடுத்து வீசி­னார். இரு மகள்­களும் சுத்­தம் செய்ய உத­வி­னர். பின்­னர் 20 வயது மகளை அறை­யைச் சுத்­தம் செய்­யச் சொன்­னார்.

அவர் கைப்­பே­சி­யில் பேசிக்­கொண்­டி­ருந்­த­தால் கோப­ம­டைந்த சாஹ­டியா, அவ­ரைத் திட்­டி­ய­து­டன், துணி தொங்­க­வி­டும் ஹாங்­க­ரால் முது­கி­லும் இடது தோளி­லும் பல­முறை காயம் ஏற்­படு­ம­ள­வுக்கு அவரை அடித்­தார். பிறகு ரேசர் பிளே­டால் மக­ளின் இடது தொடை­யில் வெட்­டுக்­கா­யம் ஏற்­ப­டுத்­தி­னார். வெளியே ஓடிய இரண்­டா­வது மகள் காவல் துறையை அழைத்­தார்.

வேண்­டு­மென்றே காய­மேற்­ப­டுத்­திய குற்­றத்தை நீதி­மன்­றத்­தில் ஒப்­புக்­கொண்­டார் சாஹா­டியா.

சாஹா­டியா தனது சொந்த மகள்­களை ஆறு வய­தி­லி­ருந்தே உடல் ரீதி­யா­க­வும், வாய்­மொ­ழி­யா­க­வும் கொடு­மைப்­ப­டுத்தி வந்­துள்­ளார் என்று துணை அரசு வழக்­க­றி­ஞர் ஹீர்­ஷன் கோர் கூறி­னார்.

அவர்­களை அடித்­த­தோடு மட்டு­மல்­லா­மல் சம்­ப­வம் குறித்­துக் காவல்­து­றை­யி­டம் புகார் அளித்­தால் அவர்­க­ளைப் பெண்­கள் சீர்­தி­ருத்த நிலை­யத்­துக்கு அனுப்­பப்­போ­வ­தா­க­வும் அவர் மிரட்­டி­யுள்­ளார்.

"இரண்டு மகள்­களும் தங்­கள் தாயை முழு­மை­யாக நம்­பி­யி­ருந்­த­னர், எந்த வகை­யான துன்­பு­றுத்­த­லி­ருந்­தும் அவர்­களை அவர் பாது­காத்­தி­ருக்க வேண்­டும்," என்­றார் அவர்.

வேண்­டு­மென்றே காயம் ஏற்­படுத்­திய குற்­றத்­திற்கு, மூன்று ஆண்­டு­கள் வரை சிறைத்­தண்­டனை, $5,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.