தேசிய சேவை செய்யாமல் நான்காண்டுகளாக வெளிநாடு சென்றவர் மீது குற்றச்சாட்டு

தேசிய சேவை செய்யாமல் நான்காண்டுகளாக வெளிநாடு சென்றவர் மீது குற்றச்சாட்டு

2 mins read
e497858e-62a3-4396-a5c8-656206e647a1
-

நான்கு ஆண்­டு­க­ளாக தேசிய சேவை­யைச் செய்­யத் தவ­றிய ஆட­வர் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்­றச்­சாட்­டு­களையும் நேற்று நடந்த நீதி­மன்ற விசா­ர­ணை­யில் அவர் ஒப்புக்­கொண்­டார்.

நொவ்­ரி­யாண்டி ரிஸால்டி என்ற அந்த ஆட­வர், வெளி­நாடு செல்­லும்­போது பெற­வேண்­டிய அனு­ம­தி­யைப் பெறா­மல், வெளி­நாட்­டில் தங்­கி­யி­ருந்­துள்­ளார். பின்­னர் 2019ஆம் ஆண்­டு டிசம்பர் 16ஆம் தேதி தனது கடப்­பி­த­ழைப் புதுப்­பிப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் திரும்­பி­ய­போது கைது­செய்­யப்­பட்­டார்.

ரிஸால்டி 2007 ஜன­வரி 26ஆம் தேதி­யன்று தேசிய சேவைக்கு பதிவு­செய்­தி­ருந்­தார். பின்­னர், தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் தான் படிக்­க­வி­ருக்­கும் படிப்பு முடி­யும்­வரை தேசிய சேவையை ஒத்­தி­வைக்­க­வேண்­டும் என்று அவர் விண்ணப்பித்தார்.

2008 ஜன­வரி 5ஆம் தேதி தேசிய சேவை செய்­வ­தற்கு மத்­திய ஆள்­ப­லத் தளம் அனு­மதி அளித்­தது. ஆனால், ஒத்­தி­வைக்­கப்­பட்ட தேதி­யில் அவர் தேசிய சேவை­யில் சேர­வில்லை. மாறாக, மீண்­டும் தனது தேசிய சேவையை ஒத்­தி­வைக்­கக் கோரி 2008 மார்ச் 7ஆம் தேதி விண்­ணப்­பித்­தி­ருந்­தார். அப்­போது அவர், தனது தொழில் கல்­விக் கழக வகுப்பு 2008 ஏப்­ரல் மாதம் தொடங்­கு­வ­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தார். ஆனால் அதற்­கான சான்­று­களை அவ­ரால் சமர்ப்­பிக்க முடி­ய­வில்லை. அதற்­குப் பதி­லாக லசால் கலைக் கல்­லூ­ரி­யில் 2008 முதல் 2011ஆம் ஆண்டு வரை பட்­ட­யக் கல்­வி­யில் சேர­விருப்­ப­தற்­கான சான்று ஒன்­றைச் சமர்ப்­பித்­தி­ருந்­தார்.

அதன்­பின் 2010ஆம் ஆண்டு இந்­தோ­னீ­சி­யா­வுக்­குச் சென்றுவிட்டார். அப்­போது அவர், வெளி­நாடு சென்­று­ வ­ரு­வ­தற்­கான அனு­ம­தி­யைப் பெற­வில்லை.

2015ஆம் ஆண்டில் தனது கடப்­பி­த­ழைப் புதுப்­பிப்­ப­தற்­காக சிங்­கப்­பூர் வந்­தி­ருந்­தார். 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி­யன்று தேசிய சேவை­யில் சேரு­மாறு பல­முறை அவ­ருக்­குக் கடி­தம் அனுப்­பப்­பட்­டும் அவர், தேசிய சேவை­யில் சேரா­மல், புதுப்­பிக்­கப்­பட்ட கடப்­பி­த­ழைப் பெற்­றுக்­கொண்டு இந்தோனீசியாவுக்குக் கிளம்­பிச் சென்­று­விட்­டார்.

நீதி­மன்ற விசா­ர­ணை­யில் தனது தவ­று­களை ஒப்புக்கொண்ட ரிஸால்டி, நீதி­மன்­றத்­தி­டம் மன்­னிப்­புக் கோரி­னார். அத்­து­டன் அவர், சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை­யில் இரண்டு ஆண்­டு­கள் தேசிய சேவை செய்­த­தா­க­வும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசா­ரணை டிசம்­பர் 27ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.