இனஉணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசிய பெண், மருட்சிக்கோளாறு நோயால் பாதிக்கப்பட்டவர் என்பது ஆய்வில் தெரியவந்ததால் அவர் மீதான மூன்று குற்றச்சாட்டுகளும் மீட்டுக்கொள்ளப்பட்டன.
"59 வயதாகும் குமாரி டான் பியோவ் ஹியோங்கின் நோயே அவரின் இந்தச் செயலுக்கு முக்கிய காரணம். எனவே அவருக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க இந்த வழக்கில் முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு நேற்று பதிலளிக்கும் வகையில், தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த வழக்குக்கு முந்தைய விசாரணையில் அவரை நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்தது.
மருட்சிக் கோளாறு நோய்தான் திருமதி டான், இதுபோன்ற தவறான கருத்துகளை வெளியிடக் காரணம் என்றும் அவர் தனது உடல்நிலை பற்றி அறிந்திருக்கவில்லை என்றும் அந்த அலுவலகம் தெரிவித்தது.
குமாரி டான் ஏற்கெனவே இரண்டு வாரங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

