ஜூரோங் லேக் மேம்பாட்டுத் திட்டத்தில் ஆர்வம் இல்லை

2 mins read
17e1d267-6d01-428e-a2a8-88f5cdf27e08
-

ஜூரோங் லேக் வாட்­டா­ரத்தை ஒருங்­கி­ணைந்த பய­ணத்­துறை பகு­தி­யாக மேம்­ப­டுத்த அர­சாங்­கம் திட்­ட­மிட்­டி­ருந்­தது. அதற்­காக ஒப்­பந்­தப்­புள்­ளி­யும் கோரப்­பட்­டது.

எனி­னும், இது­வரை இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுக்க எவ­ரும் முன்­வ­ர­வில்லை.

இதன் தொடர்­பில் கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதி அங்கு உயர்­தர தங்­கு­வ­ச­தி­யு­டன் சில்­லறை வர்த்­த­கம், உணவு, பான வர்த்­த­கம், பொழு­து­போக்கு அம்­சங்­கள் அடங்­கிய மேம்­பாட்­டுக்­கான ஒப்­பந்­தப்­புள்­ளியை சிங்­கப்­பூர் பயணத்­துறைக் கழ­கம் கோரி­யி­ருந்­தது.

ஒப்­பந்­தப்­புள்ளி சமர்­ப்பிக்க வேண்­டிய ஏழு மாத கால அவ­கா­சம் அக்­டோ­பர் மாதம் 8ஆம் தேதி­யு­டன் முடி­வ­டைந்­தது.

அந்­தக் காலக் கெடு­வுக்­குள் எந்த ஒப்­பந்­தப்­புள்­ளி­யும் கிடைக்­கப் பெற­வில்லை என்று கழ­கம் கூறி­யுள்­ளது.

இது பற்­றிய கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்த கழ­கத்­தின் வரு­கை­யா­ளர் ஈர்ப்பு, பொழு­து­போக்கு, பய­ணத்­துறை வடி­வ­மைப்பு மேம்பாட்­டுப் பிரிவு இயக்­கு­நர் ஆஷ்­லின் லூ, "ஆண்டு முற்­பகுதி ­யில் நில­விய புவி­சார் அர­சி­யல், நிச்­ச­ய­மற்ற பொரு­ளி­யல் சூழல் நில­வ­ரம் போன்­றவை ஒப்­பந்­தப்­புள்ளி சமர்­ப்பிக்­கும் முடிவை பாதித்­த­தாக இந்­தத் திட்­டத்­தின் பங்­கா­ளி­கள் கூறு­கின்­ற­னர்," என்று தெரிவித்தார்.

இதன் தொடர்­பில், கழ­கம் சந்தை நில­வ­ரம் தொடர்­பான உணர்­வு­களை தொடர்ந்து மதிப்­பீடு செய்து பய­ணத்­துறை மேம்­பா­ட்டுக்­கான பல்­வேறு சாத்­தி­யக்­கூ­று­களை ஆரா­யும் என்­றார்.

"ஜூரோங் அறி­வி­யல் நிலையம், ஜூரோங் லேக் வட்­டா­ரம் ஆகி­ய­வற்­றுக்கு அரு­கில் இருக்­கும் இந்­தப் பகுதி, பய­ணத்­துறை மேம்­பட்டு வரும் இந்த நிலை­யில், சிறந்த எதிர்­கால வாய்ப்­பு­கள் உள்ள இட­மாக விளங்­கு­கிறது," என்று விளக்­கிய திரு­வாட்டி லூ, இந்­தப் பகுதி ஜூரோங் லேக் ஏரியின் 300 மீட்­டர் நீர் முகப்பை ஒத்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

மேம்­பாட்­டுக்­குத் தேர்வு செய்­யப்­பட்­டுள்ள பகுதி 10 காற்­பந்­துத் திடல்­கள் அளவு கொண்­டது.

அத்­து­டன், சைனிஸ் கார்­டன் ரயில் நிலை­யத்­துக்கு அடுத்­தாற்­போல் உள்­ளது என்­றும் அவர் விளக்­கி­னார்.

இது குறித்து மார்ச் மாதம் விளக்­க­ம­ளித்த கழ­கம், இந்­தப் பகு­தி­யின் மேம்­பாடு தொழில்­நுட்­பம், கல்வி சார்ந்த பொழு­து­போக்கு, நீடித்த நிலைத்­தன்மை ஆகி­ய­வற்றை வலி­யு­றுத்­து­வ­தாக இருக்க வேண்­டும் என்­று திருவாட்டி லூ கூறினார்.