தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வயதானோர் சளிக்காய்ச்சல், 'நிமோனியா' தடுப்பூசி போட்டுக்கொள்ள புதிய திட்டம்

1 mins read
02578a27-a0d3-4fc6-8c3e-2b44092fce02
-

டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் அடுத்த ஆண்டு முதல் சளிக்­காய்ச்­சல் அல்­லது 'நிமோ­னியா' தொற்று ஏற்­படும் அபா­யம் அதி­க­முள்ள வய­தான நோயா­ளி­களுக்கு உத­வும் புதிய திட்­டம் அடுத்த ஆண்டு நடப்­புக்கு வர­வி­ருக்­கிறது.

தாதி­யர் தலை­மை­யில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் இத்­திட்­டம் படிப்­ப­டி­யாக மருத்­து­வ­ம­னை­யின் வெளிப்­புற நோயா­ளி­க­ளுக்­கான நிபு­ணத்­துவ மருந்­த­கங்­களில் நடப்­புக்கு வரும்.

தற்­போது ஏழு மருந்­த­கங்­களில் முன்­னோட்­ட­மா­கச் சோதிக்­கப்­படும் இம்­மு­யற்­சி­யின்­கீழ் சில ஆண்­டு­க­ளுக்­குள் மருத்­து­வ­ம­னை­யின் அனைத்து 32 மருந்­த­கங்­க­ளி­லும் சேவை வழங்­கப்­படும் என்று டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் மருத்துவ ஒருங்­கி­ணைப்­பா­ளர் கேரன் கோமதி ராஜூ தெரி­வித்­தார்.

இத்­திட்­டத்­திற்கு அப்­பால் மருத்­து­வ­ரால் பரிந்­து­ரைக்­கப்­படும் நோயா­ளி­கள் இவ்­விரு தடுப்­பூசி­களைப் போட்­டுக்­கொள்ள இய­லும். அவர்­கள் அதற்கு வேறு மருந்­த­கத்தை நாட­வேண்­டும்.

இனி வரும் ஆண்­டு­களில் சிங்­கப்­பூ­ரின் மற்ற மருத்­து­வ­மனை­களும் இத்­த­கைய திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டும்.

இதனை முன்­னிட்டு உட்­லண்ட்ஸ் ஹெல்த் வளாகத்தில் பணி­பு­ரி­யும் தாதி­யர் சிலர் டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யில் பயிற்சி பெறு­வ­தாக தொற்று நோய்­களுக்­கான தேசிய நிலை­யத்­தின் மருத்­துவ ஆலோ­ச­கர் யி ஸின்­ஹுவா கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் 2019ஆம் ஆண்­டில் எடுக்­கப்­பட்ட மக்­கள்­தொ­கைக் கணக்­கெ­டுப்­புப்­படி 60 வய­துக்­கும் 74 வய­துக்­கும் இடைப்­பட்­டோ­ரில் ஐந்­தில் ஒரு­வர் சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர். ஆனால் பத்­தில் ஒரு­வர் மட்­டுமே 'நிமோ­னியா' தொற்­றுக்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்­த­னர்.

சளிக்­காய்ச்­ச­லுக்­கான தடுப்­பூ­சியை ஆண்­டுக்கு ஒரு­முறை போட்­டுக்­கொள்ள வேண்­டும். ஆனால் 'நிமோ­னியா' தடுப்­பூ­சியை ஒரு­முறை செலுத்­திக்­கொண்­டால் போது­மா­னது.