பெற்ற மகளை மானபங்கப்படுத்திய தந்தைக்கு நேற்று, நான்கு ஆண்டுகள், 10 மாதங்கள், நான்கு வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011க்கும் 2017ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் இவ்வாறு மானபங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மகளுக்கு ஒன்பது வயதானதிலிருந்து இவர் இவ்வாறு நடந்துகொண்டார்.
மானபங்கக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணையை கோரிய ஆடவர் நீதிமன்றத்தில் தனது மகளை அவமதிக்கும் வகையில் அவருக்குப் பாலியல் ரீதியாக ஒழுங்கற்ற தொடர்புகள் இருந்ததாகவும் அதன் விளைவாகவே தந்தைமீது குற்றம் சாட்டுவதாகவும் குறைகூறினார்.
அன்பையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டியவரே தகாத முறையில் நடந்துகொள்வதற்கு எந்தக் குழந்தையும் பலியாகக்கூடாது என்று அரசாங்க வழக்கறிஞர் எடுத்துக்கூறினார். நீதிமன்றத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகக் கூறப்பட்டது. தற்போது அவர் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

