தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

9,069 பெட்டிகளில் இருந்த கள்ளச் சிகரெட்டுகள் பறிமுதல்; நால்வர் கைது

1 mins read
50413ebe-f1b2-4c48-a0c6-21d96edc3cf4
-

சிங்­கப்­பூர் சுங்­கத்­துறை இம்­மா­தம் 9ஆம் தேதி மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­யில் 9,000க்கு மேற்­பட்ட பெட்­டி­களில் இருந்த கள்­ளச் சிக­ரெட்­டு­கள் கைப்­பற்­றப்­பட்­டன. இதன் தொடர்­பில் நான்கு ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களில் மூவர் சிங்­கப்­பூ­ரர்­கள். இவர்­கள் 18 வய­திற்­கும் 32 வய­திற்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

சன்­வியூ ரோட்­டில் உள்ள தொழில்­து­றைக் கட்­ட­டத்­தில் 9,069 பெட்­டி­களில் இருந்த கள்­ளச் சிக­ரெட்­டு­களை மறு­பொட்­ட­ல­மி­டும் நட­வ­டிக்­கை­யில் இவர்­கள் ஈடு­பட்­டி­ருந்­தது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­தது.

மலே­சி­யா­வில் பதிவு செய்­யப்­பட்ட லாரி­யில் இருந்து இச்­சி­க­ரெட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொண்­ட­தா­க­வும் தங்­க­ளைப் பணி­ய­மர்த்­தி­ய­வர்­கள் யாரென்ற விவ­ரம் தெரி­யாது என்­றும் இவர்­கள் கூறி­னர்.

லாரி ஓட்­டு­நர் எனச் சந்­தே­கிக்­கப்­படும் 40 வயது மலே­சி­யர் துவாஸ் சோத­னைச் சாவ­டி­யில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவ­ரது லாரி­யும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது.

இந்­தக் கள்­ளச் சிக­ரெட்­டு­கள் மூலம் ஏய்க்­கப்­பட்ட மொத்த வரித்­தொகை ஏறக்­கு­றைய $928,000 என்­றும் இதில் $71,890 பொருள், சேவை வரி என்­றும் அதி­கா­ரி­கள் கூறி­னர்.

வரி செலுத்­தா­மல் ஏமாற்­றி­யது நிரூ­பிக்­கப்­பட்­டால் ஏய்க்­கப்­பட்ட தொகை­யைப்­போன்று 40 மடங்கு வரை­யி­லான அப­ரா­தமோ ஆறாண்டு வரை­யி­லான சிறைத்­தண்­ட­னையோ இரண்­டுமோ விதிக்­கப்­ப­ட­லாம்.