கத்தியால் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை

கத்தியால் காயப்படுத்திய ஆடவருக்குச் சிறை

1 mins read
c71c151d-2b4d-4d93-ade0-9273a9e4f52a
-

பிடோக் ரெசர்­வோர் சாலை­யில் உள்ள புளோக் 742ல் இருக்­கும் மிஸ்­பர் பிராட்டா உண­வ­கத்­தில் தாம் ஆர்­டர் செய்த உணவு இன்­னும் தயா­ரா­க­த­தால் கோப­ம­டைந்த இம்­ரான் ஒத்­மான் உண­வக ஊழி­ய­ரைப் பார்த்து உரக்க கத்­தி­னார். பிறகு கத்தி ஒன்­றைப் பயன்­ப­டுத்தி, உண­வ­கத்­தில் உண­வ­ருந்­தி­கொண்­டி­ருந்த இரு­வரை அவர் காயப்­ப­டுத்­தி­னார். அவர்­களில் ஒரு­வர் இம்­ரானை அமை­திப்­ப­டுத்த முயன்­று­கொண்­டி­ருந்­தார்.

43 வயது திரு டெரிக் குவாவை வயிற்­றில் இம்­ரான் கத்­தி­யால் குத்­தி­னார். 31 வயது ஜேசன் கோவை­யும் அவர் கத்­தி­யால் காயப்­ப­டுத்­தி­னார். அதன்­பி­றகு அவ்­வி­டத்­தி­லி­ருந்து தப்பி ஓடி­னார்.

மூன்று நாள்­கள் கழித்து, கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி­யன்று இம்­ரானை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். அவ­ரி­டம் இருந்த போதைப்­பொ­ருள் பொட்­ட­லம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இம்­ரான் போதைப்­பொ­ருள் உட்­கொண்­டி­ருப்­பது சிறு­நீர் பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்­தது.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை 47 வயது இம்­ரான் ஒப்­புக்­கொண்­டார். அவ­ருக்கு மூன்று ஆண்­டு­கள், ஐந்து மாதங்­கள், இரண்டு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

காய­ம­டைந்த திரு குவா­வுக்கு சாங்கி பொது மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது. அங்கு ஐந்து நாள்­க­ளுக்கு அனு­

ம­திக்­கப்­பட்ட அவருக்கு 20 நாள்­கள் மருத்­து­வ­மனை விடுப்பு வழங்­கப்­பட்­டது. திரு கோவுக்கு மருந்­த­கம் ஒன்­றில் சிகிச்சை அளிக்­கப்­பட்­டது.

கண்­கா­ணிப்பு கேம­ராக்­கள் மூல­மா­க­வும் விசா­ரணை மூல­மா­க­வும் இம்­ரான் அடை­யா­ளம் காணப்­பட்­ட­தாக காவல்­துறை தெரி­வித்­தது.