8,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு பண்டிகைக் கால அன்பளிப்புப் பைகள்

8,000 வசதி குறைந்த குடும்பங்களுக்கு பண்டிகைக் கால அன்பளிப்புப் பைகள்

2 mins read
2466da4f-52bb-49bd-878e-90835414356c
-

சிங்­கப்­பூ­ரின் தென்­மேற்கு வட்­டா­ரத்­தில் வசிக்­கும் 8,000 வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு இம்­மா­தத்­துக்­கும் பிப்­ர­வரி மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் பண்­டி­கைக் கால அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­படும். ஒவ்­வொரு அன்­ப­ளிப்­புப் பையின் மதிப்பு ஏறத்­தாழ $100.

ஃபெஸ்டிவ் சியர்ஸ்@சவுத் வெஸ்ட் எனும் வரு­டாந்­தி­ரத் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு இந்த அன்­ப­ளிப்­புப் பைகள் வழங்­கப்­ப­டு­கின்­றன.

பண்­டி­கைக் காலத்­தின்­போது வசதி குறைந்த குடும்­பங்­களும் மகிழ்ச்­சி­யு­டன் இருக்க இந்­தத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

அன்­ப­ளிப்­புப் பைக­ளுக்கு கோ கொக் லியோங் என்­டர்­பி­ரைஸ், புரோக்­டர் அண்ட் கேம்­பல் சிங்­கப்­பூர், மீட்டா நல்­வாழ்­வுச் சங்­கம் ஆகி­யவை ஆத­ரவு வழங்­கின.

அன்­ப­ளிப்­புப் பைகளில் அரிசி, பீ ஹூன், பானங்­கள் தயா­ரிப்­ப­தற்­கான தூள், உயிர்­ச்சத்­து­கள், பல் தேய்க்க பயன்­ப­டுத்­தப்­படும் தூரிகை, ஷாம்பூ போன்ற தனிப்­பட்ட சுகா­தா­ரப் பொருள்­கள் ஆகி­யவை உள்­ளன.

முதல் 300 அன்­ப­ளிப்­புப் பைகளை வாடகை வீடு­களில் தங்­கும் வசதி குறைந்த குடும்­பங்­க­ளுக்கு தென்­மேற்கு வட்­டார மேயர் லோ யென் லிங்­கும் வர்த்­தக, தொழில் அமைச்­ச­ரும் சுவா சூ காங் குழுத் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கான் கிம் யோங்­கும் நேற்று நேரில் சென்று விநி­யோ­கித்­த­னர்.

எளி­தில் பாதிப்­ப­டை­யக்­கூ­டிய குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு தர சமூ­கம் ஒன்­றி­ணை­வ­தைக் காணும்­போது மகிழ்ச்­சி­யாக உள்­ளது என்று அமைச்­சர் கான் தெரி­வித்­தார்.

"வசதி குறைந்த குடும்­பங்­

க­ளின் செல­வி­னத்­தைக் குறைக்க இவ்­வாண்­டின் ஃபெஸ்டிவ் சியர்ஸ்@சவுத் வெஸ்ட் திட்­டம் உத­வு­கிறது. பரி­வு­மிக்க, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய சமுதா­யத்தை உரு­வாக்க மேற்­கொள்­ளப்­படும் முயற்­சி­யில் மேலும் பலர் உதவ முன்­வர வேண்­டும் என்று விரும்­பு­கி­றோம்," என்­றார் அமைச்­சர் கான்.

அன்­ப­ளிப்­புப் பைகளை தயார் செய்து அவற்றை விநி­யோ­கிக்­கும் பணி­யில் சிங்­கப்­பூர் அறி­வுத்­தி­றன் குன்­றி­யோர் இயக்­கத்­தைச் சேர்ந்த 50 தொண்­டூ­ழி­யர்­கள் ஈடு­பட்­ட­னர்.

மைண்ட்ஸ் பள்­ளி­யைச் சேர்ந்த தொண்­டூ­ழி­யர்­கள் இம்­முறை இத்­திட்­டத்­தில் ஈடு­பட்­ட­தா­க­வும் இது திட்­டத்­துக்­குச் சிறப்பு சேர்த்­தி­ருப்­ப­தா­க­வும் திரு­வாட்டி லோ கூறி­னார்.

"தங்களுக்குப் பல சிரமங்கள் இருக்கும்போதிலும் இவ்வுலகை மேலும் சிறப்பான இடமாக்க அவர்கள் காட்டும் முனைப்பு நம் அனைவருக்கும் ஊக்குவிப்பாக அமைகிறது. தென்­மேற்கு வட்­டார சமூ­கத்தை வடி­வ­மைக்­கும் பரிவு, அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கும் உணர்வை மைண்ட்ஸ் பள்­ளி­யைச் சேர்ந்­தோ­ரின் தொண்­டூ­ழி­யச் சேவை பறை­சாற்­று­கிறது," என்­றார் திரு­வாட்டி லோ.