தெம்பனிஸ் சங்காட் குடிமக்கள் ஆலோசனைக் குழு கடந்த 2020ல் நடைமுறைப்படுத்திய மனமகிழ் பெட்டி என்ற செயல்திட்டத்தின்கீழ் நேற்று தெம்பனிஸ் செங்காட் பகுதியில் ஏறத்தாழ 400 குடும்பங்களுக்குத் தொண்டூழியர்கள் அப் பெட்டிகளை விநியோகித்தனர்.
கொண்டாட்ட விடுமுறை காலத்தில் மகிழ்ச்சியைப் பரப்புவது அந்தச் செயல்திட்டத்தின் நோக்கம்.
ஒவ்வொருவருக்கும் பொருத்தமான முறையில் மனமகிழ் பெட்டியில் பொருள்கள் இருக்கும்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு மட்டுமின்றி தாதிமை இல்லங்களில் வசிப்பவர்கள், ஒற்றை தாய்மார்கள் ஆகியோருக்கும் அது வழங்கப்பட்டது.
மனமகிழ் அன்பளிப்புப் பெட்டி விநியோகத்தில் வடகிழக்கு மாவட்ட மேயரும் தெம்பனிஸ் குழுத்தொகுதி உறுப்பினருமான டெஸ்மண்ட் சூவும் கலந்துகொண்டார்.
நேரத்தைச் செலவிட்டு தொண்டூழியத்தில் ஈடுபடும் குடியிருப்பாளர்களையும் நிறுவனங்களையும் அவர் பாராட்டினார். பெர்த்தாபிஸ் சீர்திருத்த இல்லம், ஊட்ரமில் உள்ள எச்சிஏ ஒயேசிஸ் ஆகியவற்றில் திங்கள்கிழமை மனமகிழ் பெட்டிகள் விநியோகிக்கப்படும்.

