'சிங்கப்பூரை மனதில் நிறுத்தி மலை போன்ற சவால்களை சமாளித்து உதவும் தலைவர்கள்'

'சிங்கப்பூரை மனதில் நிறுத்தி மலை போன்ற சவால்களை சமாளித்து உதவும் தலைவர்கள்'

2 mins read
444afe91-f24a-4232-a695-6caec6c9aa51
-

சிங்­கப்­பூரை மன­தில் நிறுத்தி செயல்­ப­டு­வ­தால்­தான் மலை­போன்ற சவால்­களை எல்­லாம் சமா­ளித்து சிங்­கப்­பூ­ரர்­கள் எதிர்­நோக்­கும் பிரச்­சினைகளுக்­குத் தலை­வர்­கள் தீர்வு காண்­கி­றார்­கள் என்று முன்னாள் அமைச்­சர் யாக்­கூப் இப்ரா­கிம் தெரி­வித்­தார்.

பணம் சம்பா­திக்­க­லாம் என்று நினைத்­தால் அதற்கு இந்­தப் பணி ஒத்­து­வ­ராது என்று அவர் கூறினார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் உலக இளம்­ த­லை­வர்­கள் உச்­ச­நிலை மாநாடு நேற்று தொடங்­கி­யது. அந்த மூன்று நாள் மாநாட்­டின் தொடக்­கத்­தில் இளை­யர்­களுடன் கலந்­து­ரை­யா­டல் நடந்­தது.

அதில் மாண­வர்­கள் கேட்ட கேள்­வி­க­ளுக்கு டாக்டர் யாக்­கூப் பதில் அளித்­தார்.

உயர்­நி­லைப் பள்­ளி­கள், உயர் கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்த மாண­வர்­களும் 'டியர் ஏஷியன் யூத் சிங்­கப்­பூர்' என்ற அமைப்­பைச் சேர்ந்­த­வர்­க­ளு­மாக 24 பேர் அந்த மாநாட்­டிற்கு ஏற்பாடு செய்­துள்­ள­னர்.

இந்த அமைப்பு, அனைத்­து­லக அள­வில் இளை­யர்­கள் தலை­மை­யில் செயல்­படும் 'டியர் ஏஷியன் யூத்' என்ற அமைப்­பின் பிரி­வா­கும்.

இந்த அமைப்பு, சமூ­கச் சேவை­, சமத்­து­வம், நியா­யம் ஆகி­ய­வற்றை மேம்­ப­டுத்­து­கிறது.

மாநாடு சென்ற ஆண்­டில் மெய்­நி­கர் ரீதி­யில் நடந்­தது.

முன்­னாள் அமைச்­ச­ரான டாக்­டர் யாக்­கூப், 1997ல் நாடா­ளு­மன்றத்­திற்­குத் தேர்ந்து எடுக்­கப்­பட்­ட­வர். அமைச்­சர் பத­வி­களை வகித்­த­வர்.

முஸ்­லிம் விவ­கா­ரங்­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரா­க­வும் சேவை­யாற்­றி­ய­வர். டாக்­டர் யாக்­கூப், 2020ஆம் ஆண்­டில் அர­சி­ய­லில் இருந்து ஓய்வு பெற்­றார்.

சிக்­க­லான இன்­றைய உல­கில் இளை­யர்­கள் திறந்த மன­து­டன் திக­ழ­வேண்­டும். அவர்­கள் நிறைய படிக்க வேண்­டும் என்று வேறு ஒரு மாண­வ­ரின் கேள்­விக்கு அளித்த பதிலில் டாக்­டர் யாக்­கூப் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூரை அடுத்த நிலைக்கு உயர்த்­திச் செல்­லக்­கூ­டிய அடுத்த தலை­மு­றை­யின் அங்­க­மா­கத் திக­ழும் வகை­யில் உங்­களை பலப்­படுத்­திக் கொள்­ளுங்­கள்.

"இதற்­குப் பள்­ளிக்­கூ­டங்­களில் படிப்­பது மட்­டும் போதாது. அதற்கு அப்­பா­லும் நீங்­கள் கற்க வேண்டும்," என்று அவர் மேலும் தெரி­வித்­தார்.

உச்­ச­நி­லைக் கூட்­டத்­தில் 230 பேர் கலந்துகொண்­ட­னர். நடப்பு விவ­கா­ரங்­களில் தாங்­கள் நாட்­டத்­து­டன் இருப்­ப­தால் இதில் கலந்­து­கொண்­ட­தாக பல­ரும் கூறி­னர்.

இத­னி­டையே, தேசிய இளை­யர் மன்­றத்­தின் ஒரு பிரி­வான சிங்­கப்­பூர் இளை­யர் படை, இந்த ஆண்டில் தான் மேற்­கொண்ட தொண்­டூ­ழி­யப் பணி­க­ளை விளக்­கி­யது.

இந்த அமைப்பு உள்­ளூ­ரி­லும் வெளி­நா­டு­க­ளி­லும் இந்த ஆண்டு மேற்­கொண்ட செயல்­திட்­டங்­களில் 6000 இளம் தொண்­டூ­ழி­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.