சீனாவில் இருந்து 'கிரீன் ஆலிவ் குருப்' என்ற நிறுவனம் இறக்குமதி செய்யும் பால் கலந்த இரண்டு வகை தேநீர் தயாரிப்புப் பொருள்களில், சிங்கப்பூரில் அனுமதிக்கப்படாத ஒரு வகை ரசாயன அமிலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து இந்தப் பொருள்கள் மீட்டுக் கொள்ளப்படுகின்றன.
இறக்குமதியாகி இருக்கும் அந்தப் பொருள்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரும்ப பெறும்படி இறக்குமதி நிறுவனத்திற்கு சிங்கப்பூர் உணவு முகவை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணி நடந்து வருவதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் உணவு முகவை/ஃபேஸ்புக்

