புதியதோர் உலகு செய்ய புறப்பட்ட இந்திய மாணவியர்

புதியதோர் உலகு செய்ய புறப்பட்ட இந்திய மாணவியர்

3 mins read
58bc1173-599f-400c-bb37-5a1f3c4b05c0
-
multi-img1 of 2

பெண்­கள், குறிப்­பாக இந்­தி­யப் பெண்­கள் காற்­பந்து விளை­யாட்­டில் அதி­கம் இடம்­பெ­றா­ததை மாற்ற நினைத்­த­தன் பய­னாக விளைந்­த­து­தான், 'ஆயர் ராஜா கிரி­ஃபன்ஸ்' பெண்­கள் காற்­பந்து அணி. பல்­க­லைக்­க­ழ­கப் பெண்­கள் காற்­பந்து அணி­க­ளுக்கு பயிற்­று­விப்­பா­ள­ராக பணி­யாற்றி வந்த காற்­பந்து திரு ஜெஸ்­பர் ரிச்­சர்ட் தோம­ஸுக்கு இந்­தி­யப் பெண்­கள் திறமை இருந்­தும் விளை­யாட முன்­வ­ராத நிலை வருத்­த­ம­ளித்­தது.

சிங்­கப்­பூர் ஆகா­யப்­படை, பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆகி­ய­வற்­றில் பயிற்­று­விப்­பா­ள­ராக இருந்த அவர், தற்­போது தேசிய பெண்­கள் காற்­பந்து 'ஏ' அணி­யின் துணை பயிற்­று­விப்­பா­ள­ராக இருப்­ ப­தோடு, நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து ஆயர் ராஜா க்ரி­ஃபன்ஸ்' பெண்­கள் காற்­பந்து அணியைத் தொடங்­ கி­னார்.

இந்­தியப் பெற்­றோர் விதிக்­கும் தடை­க­ளா­லும் பிரிந்த குடும்­பங்­கள், வேலை செய்­ய­வேண்­டிய கட்­டா­யம் முத­லி­ய­வற்­றா­லும் ஆர்­ வ­மி­ருந்­தும் பதின்ம வய­துப் பெண்­கள் காற்­பந்­தில் இணை­யா­மல் இருக்­கின்­ற­னர்.

அவர்­க­ளுக்கு பயிற்­சி­யும் ஊக்­ க­மும் தந்து, விளை­யா­டு­வ­தற்­கான தளங்­களை, வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தர முறன்­று­வ­ரு­வ­தாக திரு ஜெஸ்­பர் தெரி­வித்­தார்.

இந்த ஆண்டு அணி­யில் சேர்ந்து, முன்­னணி ஆட்­டக்­கா­ர­ராக விளை­யா­டும் அஷ்­வி­னி­யும் தற்­காப்பு ஆட்­டக்­கா­ர­ராக விளை­யா­டும் அக்­‌ஷி­தா­வும் காற்­பந்து விளை­யாட்­டில் தீரா ஆர்­வம் கொண்­ட­வர்­கள். நன்­யாங் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் மருத்­துவத் தாதி படிப்பு பயி­லும் இரு­வ­ரும் அங்­குள்ள காற்­பந்து அணி­யி­லும் விளை­யாடி வரு­கின்­ற­னர்.

பொழு­து­போக்­காக காற்­பந்து விளை­யாடி வந்த அக்­‌ஷி­தா­வுக்கு, முன்­பி­ருந்த பள்­ளி­களில் காற்­பந்து இணைப்­பாட நட­வ­டிக்­கை­யில் பெண்­கள் அணி இல்­லா­த­தால், காற்­பந்து விளை­யா­டு­

வ­தற்­கான வாய்ப்­பு­கள் அதி­கம் கிட்­ட­வில்லை. நீண்­ட­கா­லத்­துக்­குப் பிறகு பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் அந்த வாய்ப்பு கிட்­டி­ய­தால், அடுக்­கு­மா­டிக் கட்­டட கீழ்த்­த­ளத்­தில் விளை­யா­டிக்­கொண்­டி­ருந்த அவர் திட­லில் கால்­ப­தித்­தார்.

"பள்­ளி­யில் கற்­றுக்­கொள்ள முடி­யாத சில முக்­கிய காற்­பந்து உத்­தி­களை இங்கு கற்­றுக்­கொள்ள முடி­கின்­றது. பெரிய வாய்ப்­பு­கள் எளி­தில் கிடைப்­ப­தில்லை. அவற்றை இந்த அணி எனக்­குத் தந்­துள்­ளது. என்­மேல் எனக்கு நம்­பிக்­கை­யும் பிறந்­துள்­ளது," என்­றார் 17 வயது மாண­வி­யான அக்­‌ஷிதா வெங்­க­டேஷ்.

பெண்­களே பெண்­க­ளுக்கு உத­விக்­கொள்­ளும் ஆத­ர­வா­ன­தொரு காற்­பந்து சமூ­கத்தை அமைத்­துக் கொடுத்­தி­ருக்­கும் ஆயர் ராஜா பெண்­கள் காற்­பந்து அணி­யின் ஆத­ரவு தனக்கு கை கொ­டுத்­துள்­ள­தா­கக் கூறி­னார் மாணவி அஷ்­வினி மெத்தியா. 17. சிறு­வ­ய­தி­லி­ருந்தே காற்­பந்து விளை­யாடி வரும் இவர், பெண்­கள் பிரி­மி­யர் லீக் போட்­டி­களில் விளை­யா­டும் கன­வைக் கொண்­டுள்­ளார்.

அதற்கு ஒரு தொடக்­கப்­புள்­ளி­யாக அமைந்­தது, கடந்த அக்­டோ­பர் மாதம் ஆயர் ராஜா க்ரி­ஃபன்ஸ் அணி கலந்­து­கொண்ட பெண்­கள் தேசிய லீக் போட்­டி­கள். ஆட்டத்தில் சம­நிலை கண்­டி­ருந்த அவர்­க­ளது அணி அய­ராது விளை­யா­டி­ய­தா­க­வும் இந்த அனு­ப­வம் தமக்கு மென்­மே­லும் நம்­பிக்கை அளித்­த­தா­க­வும் பகிர்ந்­து­கொண்­டார் அஷ்­வினி.

2020ல் தொடங்­கப்­பட்ட ஆயர் ராஜா க்ரி­ஃபன்ஸ் பெண்­கள் காற்­பந்து அணி, கொவிட்-19 தடை­க­ளால் பல போட்­டி­களில் பங்­கெ­டுக்க முடி­ய­வில்லை. எதிர்­ வ­ரும் சிங்கா கிண்­ணப் போட்டி உள்­ளிட்ட போட்­டி­களில் கலந்­து­கொண்டு சாதிக்­கும் குறிக்­கோள் கொண்­டுள்­ளது இந்த அணி.

செல­வி­னங்­க­ளைச் சமா­ளிப்­

ப­தில் இந்த அணி சவால்­க­ளைச் சந்­தித்து வரு­வ­தா­கக் கூறிய அணி உரிமையாளர் திரு செல்­வ­கு­மார் பன்­னீர்­செல்­வம், ஆயர் ராஜா கிரி­ஃபன்ஸ் அணி எதிர்­கா­லத்­தில் நிபு­ணத்­து­வப் போட்­டி­க­ளுக்­கான ஒப்­பந்­தம் பெறும் குறிக்­கோள் கொண்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

செய்தி: ஆ. விஷ்ணு வர்­தினி