பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் இம்மாதம் 31ஆம் தேதி வரை விடுப்பில் உள்ளார்.
பிரதமர் விடுமுறையில் உள்ள நாள்களில் மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான தியோ சீ ஹியன் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.
பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்தது.

