ரயில் கட்டமைப்பால் காற்று மாசுப் பிரச்சினை இல்லை

ரயில் கட்டமைப்பால் காற்று மாசுப் பிரச்சினை இல்லை

1 mins read
677614ff-b834-44fd-99f6-7ebc42ccd74e
-

சிங்­கப்­பூ­ரின் பெரு­வி­ரைவு ரயில் போக்­கு­வ­ரத்­துக் கட்­ட­மைப்பு அனைத்­து­ல­கத் தர­நி­லை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் இருப்­ப­தாக நிலப்­போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

லண்­டன், பாரிஸ் போன்ற நக­ரங்­களில் ரயில் நிலை­யங்­களின் காற்று வெளிப்­புறக் காற்­றை­விட அதிகம் மாசடைந்து இருப்பது அண்­மைய ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது. ரயி­ல் சக்­க­ரங்­கள் தண்­ட­வா­ளங்­களில் உராய்­வ­தா­லும் வேகத் தடைக் கருவி, மின் தொடர்­புக் கரு­வி­ஆகி­ய­வற்­றின் இயக்கத்தா­லும் காற்று இவ்­வாறு மாசு­ப­டு­கிறது.

ஆனால் சிங்­கப்­பூர் ரயில் நிலை­யங்­களில் ரயில் பாதைக்­கும் தள­மே­டைக்­கும் இடை­யில் முழு உய­ரக் கத­வு­கள் பொருத்தியிருப்பதால் மேம்பட்ட பாதுகாப்பு, எரிபொருள் சேமிப்பு, மாசடைந்த காற்று ரயில் பாதையில் இருந்து தளமேடைக்குப் பரவுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை சாத்தியமாகியிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.