ஜாலான் பகாரில் உள்ள ஒரு காட்டுப்பகுதி, தொழில்துறை பயனீட்டுக்காக மேம்பட உள்ளது. இருந்தாலும் அந்த மேம்பாடுகளுக்கு முன்னதாக சுற்றுச்சூழல் ஆய்வு ஒன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த 40 ஹெக்டர் காட்டுப் பகுதி, ஜூரோங் புத்தாக்க மாவட்டத்தின் பகார் வட்டாரமாக உரு வெடுக்கும்.
ஜூரோங் புத்தாக்க மாவட்டம் என்பது ஐந்து வட்டாரங்களை உள்ளடக்கிய 600 ஹெக்டர் பரப்பளவு உள்ள அதிநவீன தொழில்துறை மாவட்டமாக இருக்கும்.
ஜாலான் பகாரில் உள்ள காட்டுவள இடம் வனவிலங்கு உயிரினங்களுக்குப் புகலிடமாக இருப்பதால் சுற்றுப்புற ஆர்வலர்கள் கவலை தெரிவித்து இருக்கிறார்கள்.
அந்தப் பகுதியில் இடம்பெறக்கூடிய மேம்பாட்டுத் திட்டங்களால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வு 2023ல் தொடங்கும் என்று ஜூரோங் நகராண்மைக் கழகத்தின் இயக்குநர் திருவாட்டி ஃபின் டே தெரிவித்தார்.
கழகம் கூடுமானவரை பசுமை வளத்தையும் உயிரியல் பன்மயத்தையும் கட்டிக்காக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

