நோயற்ற, நலமிக்க வாழ்வுக்கு வழிகாட்டிய சுகாதார விழா: விழிப்புணர்வு ஏற்பட உதவி

நோயற்ற, நலமிக்க வாழ்வுக்கு வழிகாட்டிய சுகாதார விழா: விழிப்புணர்வு ஏற்பட உதவி

2 mins read
c568df68-8316-4801-9a54-28e04b746058
-

மாதங்கி இளங்­கோ­வன்

சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே குறிப்­பாக சிங்­கப்­பூர் இந்­தி­யர்­க­ளி­டையே நல­மிக்க வாழ்க்­கைப் பாணி­யின் முக்­கி­யத்துவத்தை வலி­யு­றுத்­தும் நோக்­கத்­தில் நடந்­தே­றிய 'சுகா­தார விழா 2022' நோய்­களை முன்­கூட்­டியே எவ்­வாறு தவிர்த்­துக் கொள்­ள­லாம் என்­பது பற்­றிய விழிப்­பு­ணர்வை மேம்­ப­டுத்­தி­யது.

சுகாதாரப் பரி­சோ­தனை செய்து­கொள்ள மக்­க­ளி­டையே நில­வும் தயக்­கத்­தைப் போக்கி உரிய காலத்­தில் மருத்­துவப் பரி­சோ­த­னை­களைச் செய்­து­கொள்ள அந்த விழா ஊக்­க­மூட்­டி­யது.

நாள்­பட்ட நோய்­க­ளைத் திறம்­பட சமா­ளிப்­பது எப்­படி என்­பது பற்­றி­யும் அந்த விழா­வில் பல­ரும் பல­வற்­றை­யும் கற்­றுக்­கொண்­ட­னர்.

இந்து அறக்­கட்­டளை வாரி­யம், மீடி­யா­கார்ப் ஒலி 96.8 வானொலி இணைந்து அந்த விழா­வுக்கு ஏற்­பாடு செய்­தன.

சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்டுச் சங்­கம் (சிண்டா), மக்­கள் கழக நற்­ப­ணிப் பேரவை ஆகி­யவை துணை அமைப்­பு­க­ளாக இருந்து உதவ, சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், டான் டோக் செங் மருத்­து­வ­மனை, சாட்டா காம்­ஹெல்த் ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் அந்த விழா இம்­மா­தம் 18ஆம் தேதி பிஜிபி மண்­டபத்­தில் நடந்­தது.

விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக சுகா­தார இரண்­டாம் அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி கலந்து­கொண்­டார்.

விழா­வுக்கு வந்­த­வர்­களில் பலருக்­கும் வய­துக்­கேற்ப இரத்த அழுத்­தம், நீரி­ழிவு, கெட்ட கொழுப்பு போன்ற நோய்­க­ளைக் கண்­ட­றிய பரி­சோ­த­னை­கள் நடத்­தப்­பட்­டன.

இந்து அறக்­கட்­டளை வாரி­யத்­தின் சுமார் 100 மருத்­துவ தொண்­டூ­ழி­யர்­கள் பல்­வேறு நோய்­கள் பற்றி­ மக்­க­ளுக்கு விளக்­கி­னர்.

மார்­ப­கப் புற்­று­நோய் பரி­சோ­த­னை­யைச் சொந்­த­மாக செய்­து­கொள்­வது எப்­படி என்­பதை அவர்­கள் மாதர்­க­ளுக்­குப் போதித்­த­னர்.

அதே­போல, செயற்கை சுவாச சிகிச்சை பற்­றி­யும் மக்­க­ளுக்­குக் கற்­பிக்­கப்­பட்­டது.

இந்­தி­ய­ரின் உடல்­நல பழக்­க­வழக்­கங்­களை ஆராயத் தோதாக சுகா­தார மேம்­பாட்டு வாரி­யம், ஆய்வு பங்­கேற்­பா­ளர்­க­ளாகச் சிலரைச் சேர்த்­துக்­கொண்­டது.

இந்த வாரி­யத்­தின் இயக்­கு­நர் திரு­வாட்டி வாசுகி, 42, நோய்­கள் பற்றி இந்­தி­யர்­க­ளுக்கு விழிப்­புணர்வை ஊட்­டு­வது முக்­கிய நோக்­கம் என்­றார். இளை­யர்­களை ஈர்க்க அதிக முயற்­சி­கள் இடம்­பெ­றும் என்­றும் அவர் கூறி­னார்.

உடல்­ந­ல­னுக்கு முன்­ன­தா­கவே திட்­ட­மி­டும் ஏற்­பாடு பற்­றி­யும் முக்­கிய மருத்­துவ திட்­டங்­கள், மானி­யங்­கள் பற்­றி­யும் முதி­யோ­ருக்கு விளக்­கி­ய­தாக விழா­வில் கலந்­து­கொண்ட மருத்­துவ தொண்­டூ­ழி­யர் கவிதா முரு­கன், 45, தெரி­வித்­தார்.

சுகா­தார விழா­விற்கு முதல்­முறை­யாக வந்த ஜெய்­பா­லாஜி சப்னா, 39, அடுத்த விழா­வில் மறதி நோயாளி­க­ளுக்கு உத­வு­வது பற்றி தொண்­டூ­ழி­யர்­கள் கற்­றுக்­கொடுத்தால் அது மேலும் உத­வி­யாக இருக்­கும் என்­றார்.