மத்திய வர்த்தக வட்டாரத்தை நோக்கி எம்ஆர்டி ரயில்களில் பயணம் செய்தோரின் எண்ணிக்கை இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை வார நாள்களின் காலை உச்சநேரத்தில் குறைவாகவே பதிவானது.
நீடிக்கும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் காரணமாக போக்குவரத்து முறை மாற்றம் கண்டிருப்பதால், கொவிட்-19 கொள்ளை நோய்க்கு முன்பிருந்ததில் பாதி அளவையே இது எட்டி உள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
அத்துடன், காலை மற்றும் மாலை உச்சநேரங்களில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கையும் குறைவு என்று பயணச்சீட்டு தரவுகள் தெரிவித்துள்ளன.
கொள்ளைநோய்க்கு முந்திய 2019 அக்டோபருடன் இந்த ஆண்டின் அக்டோபரை ஒப்பிடும்போது பேருந்து, ரயில்களில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்தப் பயணங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் ஒவ்வொரு வாரநாள்
களிலும் காலை உச்சநேரத்தில் ரயில்களிலும் பேருந்துகளிலும் சரா சரியாக 1.22 மில்லியன் பேர் பயணம் செய்தனர். மூன்றாண்டு
களுக்கு முன்னர் இருந்த அளவில் இந்த எண்ணிக்கை 77.8 விழுக்காடு ஆகும். 2019ஆம் ஆண்டில் இதே பத்து மாதங்களில் காலை உச்சநேரத்தின்போது நாள் ஒன்றுக்குச் சராசரியாக 1.57 மில்லியன் பேர் பயணம் செய்தனர்.
இருப்பினும், வாரயிறுதி நாள்
களையும் சேர்த்துக் கணக்கிடுகையில் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை பயணம் செய்தோரின் எண்ணிக்கையில் சிறிய மீட்சி பதிவானது.
இந்த ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையில் வாரத்தின் ஏழு நாள்களிலும் நாள் ஒன்றுக்குச் சராசரியாக 6.31 மில்லியன் பேர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினர். இது கொள்ளைநோய்க்கு முந்திய காலத்தின் எண்ணிக்கையில் 81.5 விழுக்காடு.
இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் கொவிட்-19 கொள்ளைநோய் கட்டுப்பாடுகள் பெரிய அளவில் தளர்த்தப்பட்டதன் விளைவாக ஒட்டுமொத்தப் பயண எண்ணிக்கையில் முன்னேற்றம் காணப்பட்டது.
குறிப்பாக சமூக ஒன்றுகூடல்
களுக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் ஏராளமானோர் வேலையிடங்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டதும் பயண எண்ணிக்கை அதிகரிப்புக்கு உதவின.
பயணம் தொடர்பான விவரங்கள் அடங்கிய தரவுகளை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளுக்கு நிலப் போக்குவரத்து ஆணையம் வழங்கியது.
அதில் இடம்பெற்ற தகவல்கள் நவம்பர் மாதம் சிங்கப்பூர் அனைத்துலக போக்குவரத்து மாநாடு மற்றும் கண்காட்சியின் குழு விவாதத்தின்போது ஆணையத்தின் உள்கட்டமைப்பு, மேம்பாட்டுக்கான துணைத் தலைமை நிர்வாகி திரு சுவா சோங் கெங் தெரிவித்ததோடு ஒத்து இருந்தன.
மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு உள்புற, வெளிப்புற வட்டாரங்களுக்கு இடையில் பொதுப் போக்கு வரத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பைக் கண்டதாக அப்போது அவர் கூறியிருந்தார்.
இதே குழு விவாதத்தில் பங்கேற்ற இதர நாடுகளின் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் தங்களது நாட்டின் பயண முறை கொவிட்-19 காரணமாகவும் நீக்குப்போக்கான வேலைமுறை காரணமாகவும் மாற்றம் கண்டிருப்பதாகக் கூறினர்.
காலை உச்சநேரப் பயணம் கொள்ளைநோய்க்கு முந்திய நிலையை இன்னும் எட்டவில்லை

