சிங்கப்பூர் அனைத்துலக அற
நிறுவனம் கடந்த 10 ஆண்டு
களாக 'அவர் பெட்டர் வோர்ல்ட்' (ஓ.பி.டபிள்யூ.) என்ற அமைப்பை நடத்தி வருகிறது.
ஆசியா முழுவதும் மக்கள் நலத்துக்காக போராடும் தனி நபர்களை இந்நிறுவனம் முன்னிலைப்படுத்தி காணொளிகளை வெளியிட்டுள்ளது.
'கனவு கிராமம்: இந்தியாவின் முன்னாள் பாலியல் தொழிலாளர் களின் அடைக்கலம்' என்ற தலைப்பில் காணொளி ஒன்றை ஓ.பி.டபிள்யூ. இந்த ஆண்டு வெளியிட்டது.
இது, கதை சொல்லும் பிரிவில் சிறந்த காணொளிக்கான விருதை பெற்றது.
டெல்லியில், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களின் கவலைக்குரிய நிலை யை எடுத்துச்சொல்வது இந்த காணொளியின் நோக்கமாக இருந்தது.
பாலியல் தொழிலில் இதற்கு முன்னர் ஈடுபட்ட பெண்கள் ஆதரிக்கப்படுவதையும் கட்-கதா என்ற லாப நோக்கமற்ற அமைப்பு இந்தப் பெண்களை ஆதரிப்பதையும் இந்தக் காணொளி காட்டியது.
சுயமரியாதையுடன் வாழ, இவர்
களுக்குக் கல்வி, பல்வேறு திறன்கள் ஆகியவற்றை வழங்குவதோடு அவர்களின் குழந்தைகளை வளர்க்கவும் இந்த அமைப்பு உதவியுள்ளது.
ஓ.பி.டபிள்யூ. இதுவரை ஒன்பது ஆசிய நாடுகளிலிருந்து 350 கதைகளைச் சொல்ல காணொளிகளை வெளியிட்டது. இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
விலங்குகளின் நலம், கலை, கலாசாரம், இளையர், சிறார், கல்வி, பன்முகத்தன்மை, முதியோர், சுற்றுச்சூழல், சுகாதாரம், பெண்கள் தொடர்பான பல்வேறு உலகளாவிய பிரச்சினைகளை இந்த காணொளிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகின்றன.
கடந்த 10 ஆண்டுகளில், இக்காணொளிகள் 229 மில்லியனுக்கும் மேலான பார்வைகளைப் பெற்றுள்ளன. இதில், உலகப் பிரச்சினைகளை பல சமூக நிகழ்ச்சிகள் மூலம், பொதுமக்களுடன் கலந்துரையாடும் முயற்சிகளில் இத்திட் டம் ஈடுபடுகிறது.
இத்துடன், 'மனநலத்திற்குக் குரல் கொடுப்போம்' என்ற தலைப்பில், உயிரை மாய்த்துக்கொள்ளும் பிரச்சினைகளை எடுத்துச் சொல்லும் மூன்று காணொளிகளை யும் ஓ.பி.டபிள்யூ. வெளியிட்டது.
தங்களின் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணங்களுடன் தினந்தோறும் போராடுபவர்களின் கதைகளை இந்தக் காணொளிகளில் பார்க்கலாம்.
'லிவிங் வித் சூஸைட்' (Living with suicide), 'இம்பர்ட்டிங் எ லைஃப் ஒர்த் லிவிங்' (Impart-ing a Life worth Living) , 'டு தோஸ் ஹு ஹேவ் லாஸ்ட் எ லவ்ட் ஒன் டு சூஸைட்' (To Those Who Have Lost a Loved One to Suicide) என்ற மூன்று காணொளிகள் மனநலப் பிரிவில் வெள்ளி விருதைப் பெற்றன.
உயிரை மாய்த்துக்கொள்ளும் எண்ணம் கொண்டவர்கள் எங்கு உதவிபெறலாம் என்ற விவரங்
களையும் இந்தக் காணொளிகள் பகிர்ந்துகொண்டன. இதுவரை இக்காணொளிகள் 3.2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
ஓ.பி.டபிள்யூ. இணையத்தளம் 778,000 நபர்களைக் கொண்ட அமைப்பாக செயல்படுகிறது.
சமூகக் கதைகளை உருக வைக்கும் வகையில் சொல்லும் இந்த அமைப்பு பல விருதுகளை தொடர்ந்து பெறுகிறது. ஓ.பி.டபிள்யூ. அமைப்பின் முயற்சி
களால், இந்த சமூகப் பிரச்சினை
களைக் கையாளும் சமூக அமைப்புகளுக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளன.

