10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த கட்டுமான ஊழியர்

10 மீட்டர் உயரத்திலிருந்து கீழே விழுந்த கட்டுமான ஊழியர்

1 mins read
830aa115-b475-47d2-b43e-7ae15d9cabb4
-

கட்­டு­மா­னப் பணி­யின்­போது 10 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழுந்த பங்­ளா­தேஷ் ஊழி­யர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு உள்­ளார். ஆர்ச்­சர்ட் ரோடு அரு­கில் உள்ள சொகுசு கொண்­டோ­மி­னிய கட்­டு­மா­னத் தளத்­தில், சாரக்­கட்­டுப் பணி­களை அந்த ஊழி­யர் மேற்­கொண்டு இருந்­த­போது சம்­ப­வம் நிகழ்ந்­தது. 18 தோம்­லின்­சன் ரோட்­டில் பார்க் நோவா என்­னும் கொண்­டோ­மி­னி­யம் கட்­டப்­பட்டு வரு­கிறது.

இந்­தத் தளத்­தில் திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் 3 மணி­ய­ள­வில் இந்த வேலை­யிட விபத்து நிகழ்ந்­த­தாக மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

கீழே விழுந்­த­தால் அந்த 31 வயது ஊழி­ய­ரின் வலது கையி­லும் இரு தொடை­க­ளி­லும் காயம் ஏற்­பட்­ட­தா­க­வும் அவ­ரது உச்சந்தலை யில் வெட்­டு­கள் ஏற்­பட்­ட­தா­க­வும் அமைச்சு கூறி­யது.

'செங் இயூ ஸ்க­ஃபோல்­டிங் அண்ட் என்­ஜி­னி­ய­ரிங்' நிறு­வ­னத்­தின் ஊழி­யர் அவர்.

சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது அவர் நினை­வோடு இருந்­தார் என்­றும் மருத்­து­வ­ம­னை­யில் அவ­ரது உடல்­நிலை சீராக உள்­ள­தா­க­வும் அமைச்சு குறிப்­பிட்­டது.

இச்­சம்­ப­வம் கார­ண­மாக, உய­ரத்­தில் மேற்­கொள்­ளப்­படும் எல்லா வி­த­மான சாரக்­கட்டு நட­வ­டிக்­கை­

க­ளை­யும் நிறுத்தி வைக்க அமைச்சு உத்­த­ர­விட்டுள்­ளது.

சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படம் ஒன்று 'வாட்ஸ்அப்' சமூக ஊடகத்தில் பரவியது. ஆம்புலன்ஸ் வாகனம், சிங்கப்பூர் குடிமைத் தற் காப்புப் படையின் மூன்று வாகனங் கள், பேரிடர் உதவி, மீட்புக் குழு வாகனம், காவல்துறையின் கார் ஆகியன அங்கு காணப்பட்டன.