தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தன்­னைத்தானே அறைந்­து­கொள்­ளும்­படி பணிப்­பெண்ணை வலி­யு­றுத்­திய மூதாட்­டி

1 mins read
b09e9cd8-4fa5-4ae5-a2d0-237b70b31dfb
-

பைகள் சில­வற்­றில் பொருள்களைச் சரி­யாக அடுக்கி வைக்­க­வில்லை என்­ப­தற்­கா­கத் தன்­னைத்தானே அறைந்­து­கொள்­ளும்­படி இல்­லப் பணிப்­பெண்­ணைத் துன்­பு­றுத்­தி­னார் 63 வயது ஆங் போ கியோக்.

சம்­ப­வம் 2020ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதம் 6ஆம் தேதி நடந்­தது. முத­லா­ளி­யின் மிரட்­ட­லுக்கு பயந்த பணிப்­பெண் ஸின் இ ஃபியூ மூன்று முறை அதற்கு அடி­ப­ணிந்­தார்.

முன்­ன­தாக, தனக்கு திருப்தி அளிக்­கும் வகை­யில் பைகளை அடுக்­க­வில்லை என்று திரு­வாட்டி ஆங் குறை­கூ­றி­ய­தை­ய­டுத்து பணிப்­பெண் அமை­தி­யாக மீண்­டும் அந்த வேலை­யைச் செய்­யத் தொடங்­கி­னார். ஆனா­லும் சமா­தா­னம் அடை­யாத திரு­வாட்டி ஆங் தன்னைத்தானே அறைந்­து­கொள்­ளும்­படி பணிப்­பெண்­ணைக் கட்­டா­யப்­ப­டுத்­தி­னார். வலு­வாக அறைந்­து­கொள்­ளும்­படி மூன்று முறை வலி­யு­றுத்­தி­ய­து­டன் தனக்கு அறி­வில்லை எனும் பொருள்­ப­டும்­படி­யான வாச­கங்­க­ளைச் சொல்­லும்­படி கூறி­னார்.

தனது வீட்­டில் கண்­கா­ணிப்­புக் கேமரா பொருத்­தப்­பட்­டி­ருப்­பதை அறிந்­தி­ருந்­தும் திரு­வாட்டி ஆங் இவ்­வாறு நடந்­து­கொண்­டதை அர­சாங்க வழக்­க­றி­ஞர் எடுத்­து­ரைத்­தார்.

வலித்­த­போ­தும் பணிப்­பெண் சிகிச்சை ஏதும் எடுத்­துக்­கொள்­ள­வில்லை. அன்­றா­டம் பணிப்­பெண்­ணைத் திரு­வாட்டி ஆங் திட்­டு­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருந்த நிலை­யில் அண்­டை­வீட்­டார் காவல்­து­றை­யிடம் புகா­ர­ளித்­த­னர்.

அச்­சத்­து­டன் இருந்த பணிப்­பெண்ணை அதி­கா­ரி­கள் மீட்டு வேறு இடத்­துக்கு அனுப்­பி­னர்.

வேண்­டு­மென்றே பணிப்­பெண்­ணுக்­குக் காயம் ஏற்­ப­டக் கார­ண­மா­யி­ருந்­த­தைத் திரு­வாட்டி ஆங் ஒப்­புக்­கொண்­டார். அவ­ரது தாயார் 2019ல் உயி­ரி­ழந்த பிறகு துக்­கத்­தில் இருந்த திரு­வாட்டி ஆங்­கிற்கு பிறரை அனு­ச­ரித்­துப்­போ­கும் மன­நிலை இல்லை என்று கூறப்­பட்­டது.