வேலை கிடைப்பது சிரமமாக இருந்தாலும் தற்போதைய வேலையி
லிருந்து விலகுவது குறித்து பத்தில் ஆறு பாதுகாவலர்கள் பரிசீலித்து வருவதாக பாதுகாவலர்கள் தொழிற்சங்கம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
பாதுகாவலர் துறை தொடர்பாக நடத்தப்படும் நீண்டகால ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகியவை தொடர்பான எதிர்பார்ப்புகள் நம்பிக்கையூட்டும் வகையில் இல்லாதது இதற்கு ஒரு காரணம் என்று அறியப்படுகிறது.
அதுமட்டுமல்லாது, பணியில் இருக்கும்போது ஏதேனும் ஒரு விதத்தில் தாங்கள் துன்புறுத்தல்
களுக்கு ஆளாவதாக பத்தில் நான்கு பாதுகாவலர்கள் குறைபட்டுக்கொண்டனர்.
துன்புறுத்தல் தொடர்பாக அதிருப்திக் குரல் எழுப்பியுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக்காட்டிலும் இவ்வாண்டு அதிகம்.
சிங்கப்பூரில் தற்போதைய நில
வரப்படி 265 முகவைகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 40,000 பாதுகாவலர்கள் உள்ளனர்.
கூடிய விரைவில் இன்னொரு வேலைக்கு மாறத் தயாராக இருப்பதாக ஆய்வில் பங்கெடுத்த பாதுகாவலர்களில் 66.6 விழுக்காட்டினர் உறுதியுடன் தெரிவித்தனர்.
இந்த விகிதம் கடந்த ஆண்டில் 43.1 விழுக்காடாக இருந்தது.
பாதுகாவலர் பணி நிலையானதல்ல என்ற உணர்வு 12.5 விழுக்காட்டிலிருந்து 6.2 விழுக்காடாகக் குறைந்துள்ளபோதிலும் அந்த வேலையிலிருந்து விலகத் திட்ட
மிடுவோரின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
சம்பளம் படிப்படியாக உயர்த்தப்படும் முறையின்கீ்ழ் பாதுகாவலர்களின் ஊதியம் படிப்படியாக உயர்ந்துள்ளதாகவும் இதனால் அப்பணி குறித்து முதலாளிகள், வாடிக்கையாளர்களின் நிலைப்பாடு மாறியிருப்பதாகவும் நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் பாதுகாவலர் தொழிற்சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீவ் டான் தெரிவித்தார்.
பாதுகாவலர்களின் மாதச்
சம்பளம் கடந்த ஆண்டு $1,400ஆக இருந்தது. இவ்வாண்டு அது $1,442ஆக உயர்ந்தது.
அடுத்த ஆண்டு அது $1,650ஆகவும் 2024ஆம் ஆண்டில் பாதுகாவலர்களின் சம்பளம் $2,650 ஆகவும் ஏற்றம் காணும் என்று தெரிவிக்கப்பட்டது.
2024ஆம் ஆண்டிலிருந்து பாதுகாவலர்கள் கூடுதல் நேர ஊதியம் வழங்கப்படாது. மாறாக, அவர்
களுக்கு மொத்த சம்பள அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
கூடுதல் நேர ஊதியம் பெறு
வதற்கான வரம்பு $2,600ஆகும்.
பாதுகாவலர்களின் மாதச் சம்பளம் 2024ஆம் ஆண்டிலிருந்து அதைவிட அதிகமாக இருக்கும் என்பதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றம் மூலமாகவும் பாதுகாவலர்கள் ஒருநாளுக்கு 12 மணி நேரம் வேலை செய்வதற்குப் பதிலாக எட்டு மணி நேரத்துக்கு வேலை செய்யலாம் என்றார் திரு டான்.

