சொறி தடுப்பு கிரீம் ஒன்றைப் பயன்படுத்திய நான்கு வயது குழந்தைக்கு ஹார்மோன் தொடர்பான பிரிச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து, தாவ் ஜு ஹுவி யி மெய் லி ஷாங் கோ ஹு லி ருவான் காவ் எனும் அந்த கிரீமைப் பயன்படுத்த வேண்டாம் என்று சுகாதார அறிவியல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மனவுளைச்சல் ஏற்படும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை இந்த கிரீம் ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக உடலின் மேற்பகுதியில் கொழுப்பின் அளவு அதிகரித்தல், சிவந்த, உப்பிய முகம், உடலில் அளவுக்கு அதிகமான முடி வளர்வது, தோல் மெலிவடைதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த கிரீமை அடிக்கடி பயன்படுத்திய குழந்தைக்கு சுவாசக்குழாய் தொற்று ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பு வெளிச்சத்துக்கு வந்தது.
யூனோஸ் வட்டாரத்தில் இருந்த தற்காலிகக் கடையில் அந்த கிரீமை குழந்தையின் பெற்றோர் வாங்கி கடந்த நான்கு மாதங்களாக அதற்குப் பூசிய
தாகத் தெரிவிக்கப்பட்டது.

