உத்தரப் பிரதேசத்தில் $3.3 பில்லியன் முதலீடு

உத்தரப் பிரதேசத்தில் $3.3 பில்லியன் முதலீடு

2 mins read
be2e92cd-9f2c-4040-a776-49d91e58aaf2
-

சிங்­கப்­பூரை மைய­மா­கக் கொண்ட முத­லீட்­டா­ளர்­கள் இந்­தி­யா­வின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தில் கிட்­டத்­தட்ட ரூ.20,000 கோடி (S$3.3 பில்­லி­யன்) முத­லீடு செய்ய இணங்­கி­யி­ருப்­ப­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தொ­கை­யைப் பயன்

ப­டுத்தி உத்­த­ரப் பிர­தே­சத்­தில் தரவு நிலை­யங்­கள், தள­வா­டச் சேவை­கள், கல்வி நிலை­யங்­கள் ஆகி­யவை அமைக்­கப்­படும் என்று உத்­த­ரப் பிர­தே­சத்­தின் அடிப்­ப­டைக் கல்­வித்­து­றை­யின் முதன்­மைச் செய­லா­ளர் தீபக் குமார் தெரி­வித்­தார்.

கடந்த வாரம் உத்­த­ரப் பிர­தே­சத்­தி­லி­ருந்து அதன் நீர்­வள, வெள்­ளக் கட்­டுப்­பாடு அமைச்­சர் ஸ்வ­தந்­திரா தேவ் சிங் தலை­மை­யி­லான உயர்மட்டக் குழு சிங்­கப்­பூ­ருக்கு நான்கு நாள் அதி­கா­ர­பூர்­வப்

பய­ணம் மேற்­கொண்­டது.

உத்­தரப் பிர­தே­சத்­தின் தலை­

ந­கர் லக்­னோ­வில் அடுத்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் 10ஆம் தேதி­யி­லி­ருந்து 12ஆம் தேதி வரை உ.பி. உல­க­ளா­விய முத­லீட்டு உச்­ச­நிலை மாநாட்டை முன்­னிட்டு வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்­களை ஈர்க்க அம்­மா­நி­லத்­தைச் சேர்ந்த எட்­டு உயர்மட்டக் குழுக்­கள் 16 நாடு­களில் பய­ணம் மேற்­கொண்டு வரு­கின்­றன. அவற்­றில் இந்­தக் குழு­வும் ஒன்று. இந்த உச்­ச­நிலை மாநாட்­டின் பங்­கா­ளித்­துவ நாடாக சிங்­கப்­பூர் உள்­ளது.

"இந்­தப் பய­ணம் வெற்­றி­க­ர­மாக அமைந்­தது. இரு அர­சாங்­கங்­

க­ளுக்கு இடை­யி­லான பேச்­சு­வார்த்தை நட்பார்ந்த முறையிலும் அதிகப் பலன் தரும் வித­மா­க­வும் இருந்­தது," என்று அமைச்­சர் குமார் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ருக்­கும் உத்­தரப் பிர­தே­சத்­துக்­கும் இடையே இருக்­கும் ஒத்­து­ழைப்பு வாய்ப்­பு­கள் தொடர்­பாக வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங், நீடித்த நிலைத்­தன்மை, சுற்­றுப்­புற அமைச்­சர் கிரேஸ் ஃபூ ஆகி­யோ­ரு­டன் உத்­தரப் பிர­தேச உயர்மட்டக் குழு கலந்­து­ரை­யா­டி­யது.