சிங்கப்பூரிலிருந்து லண்டனை நோக்கிப் புறப்பட்ட விமானம், அவசரமாகத் திருப்பிவிடப்பட்டு அஸர்பைஜானில் தரையிறங்கியது.
சாங்கி விமான நிலையத்தின் முனையம் 1லிருந்து குவான்டாஸ் 'QF1' விமானம், 49 நிமிட தாமதத்திற்குப் பிறகு வெள்ளிக் கிழமை அதிகாலை 12.22க்கு புறப்பட்டது.
லண்டனை நோக்கிச் சென்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஜார்ஜியா மீது பறந்துகொண்டிருந்தபோது திருப்பிவிடப்பட்டது.
பின்னர் அந்த 'ஏர்பஸ் A380' ரக விமானம் பாகுவில் உள்ள அனைத்துலக விமான நிலையத்தில் காலை 11.07 மணியளவில் தரையிறங்கியது.
விமானி அறையில் இருந்த விமானிகளுக்கு கோளாறு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென் பட்டதால் அஸர்பைஜானில் உள்ள பாகு விமான நிலையத்தில் தரை இறங்க நேரிட்டது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்டதற்கு குவான்டாஸ் பேச்சாளர் ஒருவர் பதிலளித்தார்.
பயணம் மீண்டும் தொடங்கு வதற்கு முன்பு விமானத்தை பொறியாளர்கள் சோதனையிடுவார்கள். சரக்குப் பகுதியில் புகை வரு வதுபோல இருந்ததாக விமானிகள் எச்சரித்ததாகவும் அவர் கூறினார்.
உணர்வுக் கருவிகள் தவறாகச் செயல்பட்டிருக்கலாம் என்று கூறிய அந்தப் பேச்சாளர், பாதுகாப்பு காரணமாக விமானம் திருப்பிவிடப்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றார்.
சரக்குப் பகுதியில் புகை ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று அவர் கூறினார்.

