நாடாளுமன்றம் கூடுகிறது
வரும் ஜனவரி மாதம் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூடுகிறது. அன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் என்று நாடாளுமன்ற அலுவலர் தெரிவித்தார்.
விசாரிக்கும் வருவாய் ஆணையம்
அண்மையில் கட்டணங்களை உயர்த்திய சிங்கப்பூர் நிறுவனங்கள் அதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
சில நிறுவனங்கள், அடுத்த ஆண்டு மேலும் ஒரு விழுக்காடு அதிகரிக்கவிருக்கும் பொருள் சேவை வரியைக் காரணம் காட்டி விலையை உயர்த்துவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆணையம், அத்தகைய நிறுவனங்களை விசாரித்து வருகிறது. ஜிஎஸ்டி உயர்வை ஒரு காரணமாக வைத்து நியாயமற்ற முறையில் விலை உயர்த்தப்படுவதை லாபத்திற்கு எதிரான குழு கடுமையாகக் கருதுகிறது. இத்தகைய சம்பவங்கள் தொடர்பான கருத்துகள் தீவிரமாக விசாரிக்கப்படும் என்று ஆணையம் எச்சரித்துள்ளது.
சாலைச்சந்திப்பு எளிமையாகும்
லசாடா மின் வர்த்தக தளத்திலிருந்து வாங்கிய பொருள்களைத் திருப்பியனுப்புவதற்கு தானியக்க சுய பெட்டக வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2023 ஏப்ரல் முதல் இது நடைமுறைக்கு வரும். 'பாப்டிராப்' என்ற பெட்டகத்தை சிங்போஸ்ட் உருவாக்கியுள்ளது. இந்தச் சேவையை அறிமுகப்படுத்திய நேற்றைய நிகழ்ச்சியில் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் பங்கேற்றார்.

