கிருமி ஒடுங்குகிறது, பயணத்துறை எழுகிறது, ஊக்கம் கூடுகிறது

கிருமி ஒடுங்குகிறது, பயணத்துறை எழுகிறது, ஊக்கம் கூடுகிறது

4 mins read
3af6bfdd-747a-4ead-ba62-3d9b5e2fd4e7
-

முரசொலி

கொரோனா கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­களாகத் தூங்­கும் நிலைக்­குப் போய்­விட்ட சுற்­று­லாத் துறை மறுபடியும் சூடு­பி­டிக்­கத் தொடங்கி உள்ளது. அந்­தத்­ து­றை­யில் பர­ப­ரப்பு கிளம்பி இருக்­கிறது.

கொவிட்-19க்கு முந்­திய நிலையை இன்­ன­மும் எட்டவில்லை என்றாலும் வேக­மாக பழைய நிலை திரும்புகிறது. சிங்­கப்­பூ­ருக்குச் சுற்­றுப் பய­ணி­கள், வர்த்­தக பய­ணி­கள் அதிகமாக வரத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

இந்த ஆண்டு ஜன­வரி மாதம் 57,000 பய­ணிகள் இங்கு வந்­த­னர். இந்த எண்­ணிக்கை கடந்த நவம்­பரில் 816,000 பேராக அதி­க­ரித்­துள்­ளது. சிங்­கப்­பூ­ருக்கு நவம்­பர் மாத முடிவுவரை இந்­த­ ஆண்டு வருகை தந்துள்ள மொத்த பய­ணி­க­ளின் எண்ணிக்கை 5.37 மில்­லி­ய­னாக இருக்­கிறது என்று சிங்­கப்­பூர் பய­ணத்­துறை கழ­கம் தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டு முடி­வில் நான்கு மில்­லி­யன் முதல் ஆறு மில்­லி­யன் வரை சுற்­றுப்­ப­ய­ணி­க­ளை சிங்­கப்­பூ­ருக்கு வரும்­படி கவர்ந்து ஈர்க்க வேண்­டும் என்ற இலக்கை நிர்ணயித்­துள்ள கழ­கம், அந்த இலக்கை வெற்­றி­க­ர­மான முறை­யில் நிறை­வேற்­றி­விட்ட ஒரு கட்­டத்தை எட்டி இருக்­கிறது.

இருந்­தா­லும்­கூட இந்த அளவு, கொவிட்-19 தலை எடுத்­த­தற்கு முன் அதா­வது, 2019ல் இங்கு வந்த மொத்த பய­ணி­க­ளின் எண­ணிக்­கை­யான 19.1 மில்­லி­ய­னு­டன் ஒப்­பிட்­டுப் பார்க்­கை­யில் மிகவும் குறை­வு­தான். இதற்குக் கொரோனா மட்­டுமே கார­ண­மா­கத் தெரி­ய­வில்லை.

உக்­ரே­னில் தொட­ரும் போர், விமான நிறு­வனங்­களின் விமானக் கொள்­ள­ளவு ஆற்­றல், ஐரோப்பாவுக்­கும் அமெ­ரிக்­கா­வுக்­கும் இடை­யில் குறுந்­தொலைவுப் பய­ணங்­களை மேற்­கொள்ள பய­ணி­களி­டம் காணப்­படும் நாட்­டம் உள்­ளிட்ட பல அம்சங்­களும் இதர காரணங்களாகத் தெரி­கின்றன.

இவை ஒரு­பு­றம் இருக்க, பய­ணத் துறை சூடு­பிடிப்­ப­தற்கு ஏற்ப ஹோட்­டல் தொழில்­து­றை­யி­னர் ஆயத்­த­மாகி வரு­கி­றார்­கள். தேவையைப் புரிந்­து­கொண்டு அதைச் செம்­மை­யா­கக் பயன்­ப­டுத்­திக் கொள்ள இந்­தத் துறை­யி­னர் காய்­களை நகர்த்தி வரு­கி­றார்­கள்.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த இரண்டு ஆண்­டு­களில் மேலும் ஒன்­பது ஹோட்­டல்­கள் திறக்­கப்­பட இருக்­கின்­றன. இந்த நில­வ­ரம், சிங்­கப்­பூர் வரும்­படி உலகப் பய­ணி­க­ளி­டம் விருப்­பத்­தைத் தூண்­டி­வி­டும் அம்­சமாக இருக்­கும் என்­பது திண்­ணம். உல­கின் இதர நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சிங்­கப்­பூ­ரில் ஹோட்­டல்­கள் குறை­வா­கத்­தான் உள்ளன.

கொரோனா கார­ண­மாக முடங்­கிக் கிடந்த பய­ணத்­துறை மறு­ப­டி­யும் சூடுபிடிக்­கும் நிலை­யில், சுற்­றுப் பய­ணி­க­ளின் எதிர்­பார்ப்­பு­களும் விருப்­பங்­களும் மாறி இருக்­கும் என்று எதிர்­பார்க்க இடம் உள்­ளது. வருங்­கால பய­ணி­கள் தங்­கள் விருப்­பத்திற்கு ஏற்ப தங்­கும் வச­தி­களை நாடு­வார்­கள். தேவை அதி­கரிக்­கும்­போது முன்­ப­தி­வு­கள் கூடும்.

இதைச் சமா­ளிக்க ஏது­வாக சிங்­கப்­பூ­ரில் ஹோட்­டல் துறை நன்கு மேம்­படும் என்று நம்பலாம்.

இப்­போ­தைய சூழ்­நி­லை­க­ளைப் பார்க்­கை­யில், பய­ணத்­துறை தொடர்ந்து நடை­முறை சவால்­களை எதி­ர்நோக்­கியே ஆக வேண்­டும் போல் தெரி­கிறது. குறிப்­பாக எண்­ணெய் விலை, உணவு விலை உயர்வு கார­ண­மாக செலவு அதி­க­ரித்­துள்­ளது.

தொழி­லா­ளர் சந்தை தொட­ர்ந்து இறுக்­க­மா­கவே இருந்து வரு­கிறது. இவற்றை எல்­லாம் சந்­தித்து வெற்­றி­க­ர­மான முறை­யில் மீண்டு வர­வேண்­டும்.

சிங்­கப்­பூரை பொறுத்­த­வரை அது ஓர் அனு­கூலத்தை ஏற்­ப­டுத்­திக் கொண்­டுள்­ளது. தொற்று தலை­தூக்கி இருந்த கால­கட்­டத்­தில் அந்த வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்­திக்கொண்ட சிங்­கப்­பூர், குறிப்பாக எந்த வகை பய­ணி­களை சிங்­கப்­பூ­ருக்கு கவர்ந்து ஈர்க்க வேண்­டும், அதி­கம் செல­விட தயா­ராக இருக்கும்­ அத்­த­கைய பய­ணி­க­ளுக்­குத் தோதாக என்னென்ன இடம்­பெற்று இருக்க வேண்­டும் என்­பதைப் பற்றி சிந்­தித்­தது.

அதா­வது, சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­க­ளின் எண்­ணிக்கையைப் பொறுத்­த­வரை முந்­திய அளவு களை விஞ்­சி­விட வேண்டும் என்­ப­தில் மட்­டும் ஒரு­மித்த கவ­னத்­தைச் செலுத்­தா­மல், இங்கு வந்து இங்கு பல­வற்­றை­யும் அனு­ப­விக்­கும் பய­ணி­க­ளி­டம், சிங்­கப்­பூ­ரில் தாங்­கள் செல­வி­டும் தொகை தகும் என்ற மன­நி­றைவை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­பதில் முழுக் கவ­னத்தையும் செலுத்துவதே இலக்காக உள்ளது.

சிங்கப்பூருக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 20 மில்லியனாக இருக்க வேண்டும், அந்த அளவுக்கு ஆண்டுதோறும் அனைத்துலக பயணிகளைக் கவர வேண்டும் என்பது இலக்கு. இந்த இலக்கு நிறைவேற வில்லை என்றாலும்கூட பயணிகள் இங்கு செலவிடும் தொகை, அதிகமாகவே இருக்கும் என்பதை இந்த அணுகுமுறை உறுதிப்படுத்தும்.

பொதுவாக ஹோட்டல் அறை வாடகை என்பது தேவையைப் பொறுத்தே இருக்கும். சீனா தன் கதவுகளை மறுபடியும் அகலத் திறந்துவிடும்போது இங்கு பயணிகளின் எண்ணிக்கை பெருகும்.

ஹோட்டல் துறையைப் பார்க்கையில், அந்தத் துறை­யும் தொற்று காலத்­தைப் பய­னுள்ள வழி­களில் பயன்­ப­டுத்­திக்கொண்­டதாகவே தெரிகிறது.

அது வச­தி­களை மேம்­ப­டுத்­தி­யது. புதிய புதிய பயண அனு­ப­வங்­க­ளைப் புத்­தாக்க வழி­களில் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. தன் ஊழி­யர்களின் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­தி­யது. ஹோட்­டல் துறைக்கு அனு­கூ­ல­மாக பல­வும் இடம்­பெறுகின்­றன. பல்வேறு தொழில்­ துறை, உல்­லாச பொழுதுபோக்­குத்­துறை நிகழ்ச்­சி­களை சிங்­கப்­பூ­ரில் நடத்த திட்­டங்­கள் உள்ளன.

அண்­மை­யில் கடந்த அக்­டோ­ப­ரில் நடந்த கிராண்ட் பிரீக்ஸ் ஃபார்முலா1 கார் பந்­த­யம் போன்ற அத்­த­கைய நிகழ்ச்­சி­கள் அதி­க­மாக செல­வி­டும் பய­ணி­க­ளை­யும் கவ­ரும்.

எல்லா நில­வ­ரங்­க­ளை­யும் ஆராய்ந்து பார்க்கும் போது பய­ணத்­துறை நீண்ட காலப்­போக்­கில் வளர்ச்சி அடை­யும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­தச் சூழ­லில், ஹோட்­டல்களை நடத்­துவோர் தங்­கள் சேவை­யையும் வச­தி­க­ளையும் விருந்­தினர்­ க­ளின் விருப்­பங்­களை நிறை­வேற்­றும் அள­வுக்கு மேம்­ப­டுத்­தும்பட்­சத்­தில், அதற்கு உரிய அதிக கட்டணத்தை அவர்­கள் நிர்­ண­யிக்­க­லாம். அதி­கம் செல­வி­டும் பய­ணி­களை அதிக எண்­ணிக்­கை­யில் அவர்கள் தாரா­ள­மாக எதிர்­பார்க்­க­லாம்.

மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு ஏற்ப மாறிக்கொண்டால், மீள்திறனுடன் திகழ்ந்தால், எதிர்காலத்திற்குத் தோதாக ஆயத்தமாக இருந்தால் பயணத்துறை சூடுபிடிக்கும் சூழலில், ஹோட்டல் துறையும் செழித்தோங்கும் என்பது உறுதி.