தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய வர்த்தக வட்டாரத்தில் அலுவலக வாடகை ஏறுமுகம்

2 mins read
38ee617d-2093-45aa-934e-d8ac869ceeef
-

கொவிட்-19 தொற்­றுப் பர­வல் தணிந்து, அதி­க­மான ஊழி­யர்­கள் பணி­யி­டங்­க­ளுக்கு மீண்­டும் திரும்­பத் தொடங்­கி­யுள்­ள­தால் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் அலு­வ­லக வாட­கைச் சந்தை சூடு­பி­டித்­துள்­ளது. அடுத்த ஆண்­டி­லும் அவ்­வட்­டா­ரத்­தில் அலு­வ­லக வாடகை தொடர்ந்து ஏறு­மு­கத்­தில் இருக்­கும் என்­பது சொத்­துச் சந்­தைப் பகுப்­பாய்­வா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்பு.

இவ்­வாண்­டின் கடை­சிக் காலாண்­டில் மத்­திய வர்த்­தக வட்­டா­ரத்­தில் 'ஏ' தர­நிலையிலான அலு­வ­ல­கத்­திற்­கான மாத வாடகை சதுர அடிக்கு 11.70 வெள்­ளி­யாக உயர்வு கண்டது.

தொடர்ந்து ஏழா­வது காலாண்­டாக இந்த உயர்வு இடம்­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

ஒட்­டு­மொத்­தத்­தில், இது 8.3% உயர்வு. முந்­திய ஆண்­டைக்­காட்­டி­லும் இது 3.8% அதி­கம்.

தேவை அதி­க­ரித்து வரு­வ­தால் நாடு முழு­வ­தும் அலு­வ­ல­கங்­க­ளுக்­கான காலி இடங்­க­ளின் அள­வும் குறைந்து வரு­கிறது. 2021ஆம் ஆண்டு இறு­தி­யில் 6.3 விழுக்­காடாக இருந்த காலி­யிட விகி­தம், இப்­போது 5 விழுக்­கா­டா­கக் குறைந்­துள்­ளது என்று 'சிபி­ஆர்இ' சொத்து ஆலோ­சனை நிறு­வ­னம் தெரி­விக்­கிறது.

சந்­தை­யில் தேவை அதி­க­மாக இருப்­ப­தால், குத்­த­கைப் புதுப்­பிப்­பின்­போது வாட­கை­யும் உயர்த்­தப்­படு­கிறது. இத­னால், கட்­டட உரி­மை­யா­ளர்­களும் பய­ன­டை­கின்­ற­னர்.

இவ்­வாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் காலா­வ­தி­யான குத்­தகை ஒப்­பந்­தங்­கள் புதுப்­பிக்­கப்­பட்­ட­போது, வாடகை சரா­ச­ரி­யாக 7.9% உயர்த்­தப்­பட்­டது என்று 'கேப்­பிட்­டா­லேண்ட் இன்­ட­கி­ரேட்டட் கமர்­ஷியல் டிரஸ்ட் (சிஐ­சிடி)' தெரி­வித்­தது.

அதே­வே­ளை­யில், 2021 செப்­டம்­பர் 30ஆம் தேதி 91.7 விழுக்­கா­டாக இருந்த வாட­கை­யி­ருப்பு விகி­தம், இவ்­வாண்­டின் அதே நாளில் 96 விழுக்­கா­டா­கக் கூடி­யது.

'சிஐ­சிடி'க்கு உரி­மை­யான கட்­ட­டங்­களில் அலு­வ­லக வாடகை சதுர அடிக்கு $10.52 என்ற நிலையை எட்­டி­யுள்­ளது. 2021ல் இது சதுர அடிக்கு $10.07ஆக இருந்­தது.

கடந்த 2019ஆம் ஆண்­டைக்­காட்­டி­லும், இவ்­வாண்­டில் புதிய குத்­த­கை­க­ளுக்­கான வாடகை விகி­தம் 2% முதல் 12% வரை கூடி­ உள்­ளது என்று சிட்டி டெவ­லப்­மென்ட்ஸ் லிமி­டெட் நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் குறிப்­பிட்­டார்.

இருப்­பி­னும், தொழில்­நுட்­பத் துறை­யில் அதி­க­மான ஆட்­கு­றைப்பு, ஆட்­சேர்ப்பு நிறுத்த நட­வ­டிக்­கை­கள் அடுத்த ஆண்­டில் அலு­வ­லக வாட­கைச் சந்­தை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்று சிபி­ஆர்இ நிறு­வ­னத்­தின் தென்­கி­ழக்­கா­சிய ஆய்­வுப் பிரி­வுத் தலை­வர் டிரி­சியா சோங் கூறி­னார். கடந்த ஈராண்டு­களில் ஒட்­டு­மொத்த வாட­கைச் சந்­தை­யில் அத்­து­றை­யின் பங்கு 40 முதல் 50 விழுக்­கா­டாக இருந்­தது என்று அவர் சொன்­னார்.

அதே­போல, காலி­யிட விகி­த­மும் அதி­க­மா­க­லாம் என்­றும் சிபி­ஆர்இ குறிப்­பிட்­டது.