2023ஆம் ஆண்டில் தொழில் நிலையாக இருக்க வேண்டும்: உணவகங்கள் எதிர்பார்ப்பு

2023ஆம் ஆண்டில் தொழில் நிலையாக இருக்க வேண்டும்: உணவகங்கள் எதிர்பார்ப்பு

3 mins read
9e6825ae-75b3-4e0e-b16e-b36fdfdfcecc
-

கொவிட்-19 தொற்று பர­வத் தொடங்­கி­ய­தில் இருந்து பல ஏற்­றத்­தாழ்­வு­க­ளைக் கண்டு வந்­துள்ள வணி­கர்­கள், 2023ஆம் ஆண்­டில் தொழில் நிலை­யாக இருக்­கும் என்று நம்­பு­கின்­ற­னர்.

குறிப்­பாக, கொவிட்-19 பர­வல் கார­ண­மாக விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டு­க­ளால் உண­வ­கங்­கள் பெரி­தும் பாதிப்­ப­டைந்­தன. கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்டு பெரிய குழுக்­க­ளா­கச் சேர்ந்து உணவு உண்ண முடி­யும் என்று அர­சாங்­கம் அறி­வித்­த­பின், உண­வ­கங்­கள் ஓர­ள­விற்கு இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பத் தொடங்­கி­யுள்­ளன.

இத­னை­ய­டுத்து, அடுத்த ஆண்­டில் தொழில் நிலை­யாக இருக்­கும் என்­றும் சவால்­கள் பெரிய அள­வில் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தாது என்­றும் உண­வக உரி­மை­யா­ளர்­கள் எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கின்­ற­னர்.

இருப்­பி­னும், தாங்­கள் எப்­போ­தும் எதிர்­கொள்­ளும் ஒரு சில சவால்­கள் குறித்து உரி­மை­யா­ளர்­கள் தங்­கள் கருத்­து­க­ளைத் தமிழ் முர­சி­டம் பகிர்ந்­து­கொண்­ட­னர்.

பொது­வா­கவே, விலை­வாசி உயர்வு என்­பது மக்­களும் வணி­கர்­களும் எப்­போ­தும் எதிர்­நோக்­கும் ஒன்­றா­கும்.

கொவிட்-19 தாக்­கத்­தால் பொருள்­க­ளின் விலை அதி­க­ரித்து விட்­டன. எடுத்­து­காட்­டாக, முன்பு $4 முதல் $4.50வரை கொடுத்து ஒரு கோழியை வாங்­கிய உண­வகங்­கள், இன்று அதற்கு $6.50 முதல் $7 வரை விலை கொடுக்க வேண்­டி­யுள்­ளது. அதேபோல அரிசி, காய்­க­றி­, இறைச்சி என்று எல்லாமே விலை­யேற்­றம் கண்­டுள்­ள­தைச் சுட்­டிக்­காட்­டி­னார் 'பாய் பிரி­யாணி' உணவக மேலா­ளர் காதர் முஹை­தீன், 43.

ஆனா­லும், அதனை ஈடு­கட்ட உணவு விலையை உயர்த்­தி­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் அதி­ருப்தி அடை­யக்­கூ­டும் என்­ப­தால், உணவு விலையை உயர்த்த உண­வ­கங்­கள் பெரி­தும் சிந்­திக்­கின்­றன.

கடந்த ஐந்­தாண்­டு­களில் ஒரு­முறை மட்­டுமே உணவு விலையை உயர்த்­தி­யுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார் திரு காதர்.

இந்­நி­லை­யில், கடை வாடகை உயர்த்­தப்­பட்­டுள்­ள­தால் உணவு விலையை உயர்த்­து­வ­தைத் தவிர தமக்கு வேறு வழி தெரி­ய­வில்லை என்­றார் அவர்.

ஐந்து முதல் பத்து நாள்­க­ளுக்­குள் ஒரு பெட்டி தக்­கா­ளி­யின் விலை பத்து வெள்­ளி­யாக உயர்ந்து விடு­கிறது என்­றார் 'போர்ட்டோ நோவோ கஃபே' இயக்­கு­நர் முகம்­மது ஃபரூக் ஷாஹுல் ஹமீது, 31.

விலை­யேற்ற இறக்­கம் என்­பது எப்­போ­தும் இருப்­ப­து­தான் என்­றா­லும் இது­போன்று பெரும் விலை­யேற்­றம் உண­வக உரி­மை­யா­ளர்­க­ளையே பெரி­தும் பாதிக்­கின்­றன. மூலப்­பொ­ருள் விலை ஏற்­றத்­திற்கு ஏற்ப அவர்­கள் உணவு விலையை உயர்த்­து­வ­தும் சாத்­தி­ய­மில்லை.

உணவு விலையை உயர்த்­தி­னால் வாடிக்­கை­யா­ளர்­கள் வரா­மல் போய்­வி­ட­லாம் என்று அவர்­கள் அச்­சப்­ப­டு­கின்­ற­னர்.

இதற்­கி­டையே, விலை­வா­சியை விட பெரிய சிக்­க­லாக இருப்­பது மனி­த­வள அமைச்­சின் வெளி­நாட்டு ஊழி­யர் எண்­ணிக்கை ஒதுக்­கீ­டு­தான் என்று குறிப்­பிட்­டார் ஆம்­பூர் பிரி­யாணி உண­வ­கத்­தின் இயக்­கு­நர் சாம், 38.

ஊழி­யர்­க­ளைத் தக்­க­வைத்­துக் கொள்ள முடி­யா­த­தா­லும் ஊழி­யர் பற்­றாக்­கு­றை­யா­லும் வணி­கம் பாதிக்­கிறது என்­கி­றார் திரு சாம்.

ஆனா­லும், அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள மாற்­றங்­கள் இந்­தச் சிக்­க­லைப் போக்கி, நிலை­மை­யைச் சீர்­செய்து, தொழிலை மேம்­ப­டுத்­தும் என்று அவர் நம்­பு­கி­றார்.

கொரோனா பர­வ­லின்­போது அர­சாங்­கம் வழங்­கிய ஆத­ர­விற்­காக நன்­றி­யு­ணர்­வு­டன் இருக்­கும் உணவக உரிமையாளர்கள், கட்­டுப்­பா­டு­கள் குறை­யக் குறைய வணி­கம் பெரு­கும் என்று நம்­பு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் இந்­நம்­பிக்­கைக்­குக் கார­ணம், இந்­தி­யா­வி­லி­ருந்­தும் பிற நாடு­களில் இருந்­தும் சுற்­றுப்­ப­ய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்­குத் திரும்­பத் தொடங்­கி­யுள்­ள­து­தான்.

பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து தொழி­லில் நல்ல மாற்­றம் காணப்­ப­டு­கிறது என்றார் 'முத்­துஸ் கறி' உணவகத் தலைமை நிர்­வாக அதி­காரி காசி விஸ்­வ­நா­தன், 52.

பல சிக்­கல்­க­ளுக்கு இடை­யில் உண­வ­கத் தொழி­லில் ஈடு­பட்டு வந்­தா­லும், வாடிக்­கை­யா­ளர்­க­ளின் தேவை­களைக் கண்­ட­றிந்து உணவு­வ­கை­க­ளி­லும் அதற்­கேற்ப மாற்­றங்­க­ளைக் கொண்டு வரு­வது வணி­கம் நிலைப்­ப­தற்­கும் அதி­க­ரிப்­ப­தற்­கும் உத­வும் என்று 'பொடி அண்ட் பொரி­யல்' தலைமை நிர்வாக அதி­காரி ஸ்ரீ கிரண் ராகவன், 46, கூறி­னார்.

மனிதவளச் சிக்கல், வாடகை, விலைவாசி உயர்வு, பொருளியல் மந்தநிலை எனப் பலவற்றை 2023ல் எதிர்நோக்கக்கூடும் என்றாலும் 'இதுவும் கடந்து போகும்' என்பது பெரும்பாலோரின் மனநிலையாக இருக்கிறது.