பரிசளிக்க ஏற்ற நிலையில் உள்ள பணத்தாள்களைப் பெற ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து வங்கிகளில் முன்பதிவு

பரிசளிக்க ஏற்ற நிலையில் உள்ள பணத்தாள்களைப் பெற ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து வங்கிகளில் முன்பதிவு

2 mins read
43c2ab1f-19ac-4494-ab34-399050a28c27
-

சீனப் புத்­தாண்டு வரு­வதை முன்­னிட்டு, பரி­ச­ளிக்க ஏற்ற நிலை­யில் உள்ள ரொக்­கத் தாள்­க­ளைப் பணம் கொடுத்து பெற்­றுக் கொள்ள பொது­மக்­கள் வரும் ஜன­வரி 5ஆம் தேதி­யி­லி­ருந்து முன் ­ப­திவு செய்­து­கொள்­ள­லாம். சிங்­கப்­பூர் நாணய ஆணையம் நேற்று அதைத் தெரி­வித்­தது.

அதற்கு டிபி­எஸ், ஒசி­பிசி, யுஓபி வங்­கி­க­ளின் இணை­யத்­த­ளங்­களுக்­குச் சென்று முன்­ப­திவு செய்­ய­வேண்­டும். வங்­கிக் கிளை­களில் அதி­கக் கூட்­டம் ஏற்­படும் சாத்­தி­யத்தை இது குறைக்­கும்.

$2, $10, $50 ஆகி­ய­வற்­றின் பணத் தாள்­களை டிபி­எஸ், யூஓபி வங்­கி­கள் கூடு­தல் எண்­ணிக்­கை­யில் வைக்­கும். இவற்­றைக் குறிப்­பிட்ட தற்­கா­லிக தானி­யங்கி வங்கி இயந்­தி­ரங்­க­ளி­லும் வங்­கிக் கிளை­களில் உள்ள தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லும் பெற­லாம்.

60 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­துள்­ள­வர்­களும் உடற்­குறை­யுள்­ள­வர்­களும் முன்­ப­திவு செய்­யா­மல் டிபி­எஸ், யுஓபி, ஒசி­பிசி வங்­கிக் கிளை­களில் பணத்­தாள்­களை மாற்­றிக் கொள்­ள­லாம்.

பரி­ச­ளிக்க ஏற்ற நிலை­யில் உள்ள ரொக்­கப் பணத்­தாள்­கள், பொது­வாக சுத்­த­மா­னவை. பண்­டிகை காலத்­தில் பரி­சாக அளிப்­பது உட்­பட, அவை புழக்­கத்­தில் இருப்­ப­தற்கு ஏற்ற தரத்­தில் உள்­ளவை. பணத்­தாள் பத­னீட்டு இயந்­தி­ரங்­களில் அத்­தாள்­க­ளின் தரம் சரி­பார்க்­கப்­பட்­டுள்­ளது. தானி­யங்கி வங்கி இயந்­தி­ரங்­களில் பெறும் பணத்­தாள்­க­ளைப் போன்ற தரத்­தில் உள்­ளவை.

பரி­ச­ளிப்­ப­தற்­காக புதிய பணத்­தாள்­களை அச்­சி­டும்­போது தேவை­யில்­லா­மல் கரி­மம் வெளி­யேற்­றப் படு­கிறது. அத­னு­டன் வளங்­களும் வீணா­கின்­றன. அத­னால் சுற்­றுப்­பு­றத்­துக்கு உகுந்த வழி­களில் பணத்­தைப் பரி­சாக அளிப்­பதை பொது­மக்­க­ளி­டம் ஊக்­கு­விக்­கும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் முயற்­சி­களில் ஒன்­றாக பரி­ச­ளிக்க ஏற்ற நிலை­யில் உள்ள பணத்­தாள்­கள் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ளன.

பண்­டி­கை­களில் பரி­ச­ளிப்­ப­தற்கு பொது­மக்­கள் 2 வெள்ளி, 10 வெள்­ளித் தாள்­க­ளையே அதி­கம் விரும்­பு­வர் என்­றும் அவற்றை விரும்­பிய எண்­ணிக்­கை­யில் தானி­யங்கி வங்கி இயந்­தி­ரங்­களில் பெறு­வது எளி­தல்ல என்­றும் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம் குறிப்­பிட்­டது.

டிபி­எஸ் வங்கி தற்­கா­லி­க­மாக அமைக்­க­வுள்ள தானி­யங்கி இயந்­தி­ரங்­க­ளி­லும் யுஓ­பி­யின் குறிப்­பிட்ட சில அத்­த­கைய இயந்­தி­ரங்­க­ளி­லுத் முன்­ப­திவு செய்­து­கொள்­ளா­மல் புதிய பணத்­தாள்­க­ளைப் பெற்­றுக்கொள்­ள­லாம்.

சீனப் புத்­தாண்­டுக்­கா­க­வும் மற்ற பண்­டி­கை­க­ளுக்­கா­க­வும் ஒவ்­வோர் ஆண்­டும் 10 மில்­லி­யன் புதிய பணத்­தாள்­கள் அச்­ச­டிக்­கப் ­ப­டு­கின்­றன. அவற்­றில் பெரும்­பான்மை பரி­ச­ளிக்க மட்­டும் பயன்­ ப­டு­கின்­றன. சீனப் புத்­தாண்டு முடிந்த சிறிது காலத்­தில் அவை நாணய ஆணை­யத்­தி­டம் திரும்­பத் தரப்­ப­டு­கின்­றன.

ஓராண்­டில் 430 நாலறை வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக வீடு­க­ளுக்­குத் தேவை­யான மின் உற்­பத்­தி­யில் வெளி­யே­றும் அதே அளவு கரி­மம் அந்­தக் கூடு­தல் பணத் தாள்­களை அச்­ச­டிக்­கும்­போது வெளி­யே­று­கிறது. ஓராண்­டுக்கு 10,000 புதிய மரங்­களை நட்­டால்­தான் அந்த வெளி­யேற்­றத்தை ஈடு­கட்ட முடி­யும்.