பாசிர் ரிஸ் பூங்காவில் உயிரற்ற சிசு கண்டெடுப்பு

பாசிர் ரிஸ் பூங்காவில் உயிரற்ற சிசு கண்டெடுப்பு

1 mins read
f58fbb4c-b31d-407f-84e0-16a5a2ff8d18
-

பாசிர் ரிஸ் கடற்­க­ரை­யில் 'பிபி­கியூ பிட் 21'க்கு அருகே உயிரற்ற சிசு கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தாக கிறிஸ்­து­மஸ் தினத்­துக்கு முந்­தைய நாளான சனிக்­கி­ழமை இரவு 10.13 மணிக்கு தனக்கு தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறை நேற்று கூறி­யது.

கான்­கி­ரீட் பாளத்துக்கு அடி­யில் உயிரற்ற சிசு இருந்­ததை 10

வய­து சிறு­வன் கண்­டதாக சீனமொழி நாளி­தழான சாவ்­பாவ் தெரி­வித்­தது.

தம்­மு­டைய குடும்­பத்­தா­ரு­டன் பூங்­கா­வில் முகா­மிட்­டி­ருந்த அச்­சி­று­வன், தமது தாயா­ரி­டம் இது­கு­றித்து தெரி­யப்­ப­டுத்­தி­யதும் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

உயிரற்ற சிசு கண்­டெ­டுக்­கப்­பட்ட இடத்­துக்கு ஏழெட்டு காவல்­துறை கார்­களில் வந்த கிட்டத்தட்ட 20 காவல்­துறை அதி­கா­ரி­கள், அந்த இடத்­தைச் சுற்றி தடுப்­பு­வே­லி­களை அமைத்­த­தாக நேரில் கண்டோர் சாவ்­பாவ் நாளி­த­ழி­டம் கூறி­னார்.

அங்­கி­ருந்­த­வர்­க­ளி­டம் பேசிய அதி­கா­ரி­கள், ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 4 மணி வரை கடற்

­க­ரை­யில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

குழந்தை பிறப்பை வேண்­டு­மென்றே மறைப்­ப­தற்­காக, இறந்த குழந்­தை­யின் உடலை ரக­சி­ய­மாக அடக்­கம் செய்­வதோ அப்­பு­றப்­

ப­டுத்­து­வதோ குற்­ற­மா­கும்.

குற்­றம் நிரூ­பிக்கப்பட்டால், அதில் சம்­பந்­தப்­பட்­ட­வ­ருக்கு ஈராண்டு வரை சிறைத் தண்­டனை, அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.