அறிமுக முதலீட்டுத் திட்டத்தில் சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள 16 பள்ளிவாசல்கள் பங்கேற்கின்றன.
நிதி அடிப்படையில் மீள்திறனுடன் இருக்க, திட்டத்தின்கீழ் அந்தப் பள்ளிவாசல்கள் அவற்றின் கையிருப்புகளை முதலீடு செய்கின்றன.
பள்ளிவாசல் வக்காஃப் முதலீட்டுத் திட்டத்தின்கீழ் ஷரியா சட்டத்துக்கு உட்பட்ட முதலீட்டுத் திட்டங்களில் பள்ளிவாசல்கள் அவற்றின் உபரி நிதியை முதலீடு செய்யும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) கூறியது. அடுத்த ஆண்டில் இத்திட்டம் மேலும் 54 பள்ளிவாசல்
களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்று அது தெரிவித்தது.
முதலீட்டின் மூலம் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி வக்காஃப் திட்டத்தின்கீழ் செயல்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்
இந்த அறக்கட்டளை முஸ்லிம் சமூகத்தின் நீண்டகாலத் தேவை
களுக்கு முக்கியத்துவம் தருகிறது.

