லிஷா பெண்கள் பிரிவின் புதிய தலைவர் ராஜலெட்சுமி

லிஷா பெண்கள் பிரிவின் புதிய தலைவர் ராஜலெட்சுமி

1 mins read
458deca9-f4b1-4e48-a301-4c3563722952
-

பொன்­மணி உத­ய­கு­மார்

லிஷா பெண்­கள் பிரி­வின் தலை­மைப் பொறுப்பை, திரு­மதி ஜாய்ஸ் கிங்ஸ்­லி­யி­டம் இருந்து இம்­மாத இறு­தி­யில் ஏற்க இருக்­கி­றார் 33 வயது திரு­மதி கண்­ணப்­பன் ராஜ­லெட்­சுமி.

அபி­ராமி ஜுவல்­லர்­ஸின் நிதி இயக்­கு­ந­ரான திரு­மதி கண்­ணப்­பன் ராஜ­லெட்­சுமி, நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்பு உதவி பொரு­ளா­ள­ராக லிஷா பெண்­கள் பிரி­வின் நிர்­வா­கக் குழு­வில் இணைந்­தார். 2014இலி­ருந்து இதில் உறுப்­பி­ன­ராக இருக்­கும் இவர், பல நிகழ்ச்­சி­களை ஒருங்­கி­ணைக்க உதவி இருக்­கி­றார்.

அமைப்­பில் சேர்ந்­த பிறகு வணி­கம், தொழில் முனைப்பு, வர்த்தகத்தில் பெண்களின் பங்கு போன்­றவை குறித்து மேலும் தெரிந்துகொண்டதாகக் கூறும் இவர், தலை­மைத்­து­வம் மற்­றொரு கற்­றல் பய­ண­மாக அமை­யும் என்று எதிர்­பார்க்­கி­றார்.

இளைய தலை­மு­றை­யி­னர் அமைப்பை வழி­ந­டத்த வேண்­டும் என இந்த ஆண்­டின் தொடக்­கத்­தி­லி­ருந்து சிந்­தித்து வந்­த­தா­கக் கூறி­னார் கடந்த 10 ஆண்­டு­க­ளாக இதற்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் திரு­மதி ஜாய்ஸ் கிங்ஸ்லி 48.

கடந்த 10 ஆண்­டு­க­ளாக லிஷா பெண்­கள் பிரிவு சாதித்­தவை பற்றி மன­நி­றைவு அடை­வ­தா­கக் கூறிய திரு­மதி ஜாய்ஸ் கிங்ஸ்லி, அனைத்­து­லகப் பெண்­கள் தின நிகழ்ச்­சி­கள், தமிழ் மொழி மாத விழாக்­கள், வணி­கம் தொடர்­பான உரை­கள் போன்ற பல்­வேறு நிகழ்­வு­களை ஏற்­பாடு செய்­வ­தன் மூலம் பெண்­க­ளுக்கு ஊக்­கத்­தை­யும் உறு­தி­யை­யும் அளித்­த­தில் மகிழ்ச்சி கொள்­கிறார். இவர் தொடர்ந்து அமைப்­பின் ஆலோ­ச­க­ரா­கச் செயல்­ப­டு­வார்.